மதுரை, ஜன.6- மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் துப்புரவு பணி யை உறுதிப்படுத்தி தேவைக் கேற்ப கூடுதல் ஊழியர்களை நிய மிக்க வேண்டும். அரசு இ-சேவை மையங்களில் கூடுதல் ஊழியர் களை நியமிக்க வேண்டும். மேலூர் 16 ஆவது காந்திநகர் 3 ஆவது தெருவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சாலை அமைக்கப்பட வில்லை. இப்பகுதியில் உடனே சாலை அமைக்க வேண்டும். நக ரின் குடிநீர் ஆதாரத்தை பாது காக்கும் வகையில் நகராட்சி எல்லைக்குள் இருக்கும் குளம், கண்மாய்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலூர் நகர் கிளைகள் சார்பில் மேலூர் பேருந்து நிலை யம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகாக் குழு உறுப்பி னர் எஸ்.பி.மணவாளன் தலைமை வகித்தார். மார்க்கெட் கிளைச் செயலாளர் ஆர்.சாகுல்ஹமீது முன்னிலை வகித்தார். மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.பாலா மேலூர் தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன், தாலுகாக் குழு உறுப்பினர்கள் வி.அடக்கிவீர ணன், சி.எஸ்.மணி, சி.அடைக் கண், ஏ.தனசேகரன், கே.ஆனந்த், அரசு போக்குவரத்து சிஐடியு சிப்காட் கிளைத் தலைவர் கே.பி. சுரேஷ்குமார், மேலூர் பணிமனை கிளைத் தலைவர் முத்துகிருஷ் ணன் ஆகியோர் பேசினர். பிரான் மலை நன்றி கூறினார்.