districts

img

மலைவாழ் மக்களுக்கு பட்டா கோரி சிபிஎம் மனு

தூத்துக்குடி,டிச. 12 மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி கோவில்பட்டி வட்டாட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட மந்தித்தோப்பு ஊராட்சி ராஜகோபால் நகர் பகுதியில் உள்ள 60 குடும்பங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த இடவசதி ஏதும் இன்றி வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். மிகவும் ஏழ்மையான பின்னணி உடைய இம்மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க கோரி கோவில்பட்டி வட்டாட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது-    கோயில்பட்டி ஒன்றிய செய லாளர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் கே பி ஆறுமுகம் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மணி, மந்தித்தோப்பு கிளைச் செயலா ளர் துரை, மணியாச்சி கிளைச் செயலாளர் அழகு சுப்பு, கோவில்பட்டி ஒன்றிய குழு உறுப்பினர் கணேசன் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.