திண்டுக்கல், ஏப்.11- மக்கள் தலையில் வரிச்சுமை யை ஏற்ற வேண்டாம் என்றும் சொத்து வரி விகிதாச்சார உயர் வினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திண்டுக்கல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட் டுள்ளது. கட்சியின் நகரச் செயலாளர் ஏ.அரபுமுகமது, மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஆசாத், மாமன்ற உறுப்பினர்கள் ஜோதி பாசு, கே.எஸ்.கணேசன், மாரி யம்மாள், நகர்க்குழு உறுப்பினர், கிருஷ்ணன், ஜெயசீலன் உள் ளிட்டோர் மாமன்ற ஆணையரி டம் மனு கொடுத்தனர். இதே கோரிக்கையை வலி யுறுத்தி மாமன்ற கூட்டத்தில் சிபிஎம் உறுப்பினர்கள் கே.எஸ்.கணேசன், மாரியம்மாள், ஜோதி பாசு ஆகியோர் பேசினர். பட்டா வழங்குக! மேலும், மாமன்ற கூட்டத்தில் 2வது வார்டு செட்டிநாயக்கன் பட்டி வண்டிப்பாதை மக்க ளுக்கு ஏற்கனவே திமுக ஆட்சி யின் போது அமைச்சர் ஐ.பெரி யசாமி, முன்னாள் எம்எல்ஏ கே. பாலபாரதி ஆகியோர் முன் முயற்சியில் பட்டா கொடுக்கப் பட்டது. இந்நிலையில் விடுபட்ட 35 குடும்பங்களை சேர்ந்தவர் களுக்கும் பட்டா கொடுக்க வேண்டும். 35வது வார்டு அண்ணா காலனியில் கடந்த 35 ஆண்டுகளாக குடியிருந்து வரு கிற மக்களுக்கு பட்டா கொடுக்க வேண்டும். செல்லாண்டியம்மன் கோவில் வடக்கு தெருவில் 98 குடும்பத்தினர்களுக்கும், காம ராஜபுரத்திலும் விடுபட்ட குடும்பத்தினர்களுக்கும் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க மாமன்றம் முன்வர வேண்டும். திண்டுக்கல் மாநகராட்சியில் துப்புரவு பணி செய்து வந்த துப்பு ரவு பணியாளர்கள் ஓய்வு பெற்று கடந்த 2 ஆண்டுகளாக பணப் பலன்கள் கிடைக்காமல் அவ திப்பட்டு வருகிறார்கள். உடனடி யாக அந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.கணே சன், மாரியம்மாள், ஜோதிபாசு ஆகியோர் பேசினர்.