கோவை, நவ. 22 - பெரியநாயக்கன்பாளையம் ஒன்றி யத்திற்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியு றுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித் தனர். இம்மனுவில் தெரிவித்துள்ள தாவது, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிப்பகுதியில் இணைப்புச் சாலைகள் தொடர்புச்சாலைகள் பணி களை உடனடியாக துவங்கி போக்கு வரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும். மேட்டுப்பாளையம் சாலை யில் மருத்துவமனை, கோயில் அமைந் துள்ள பிரதானமான பகுதியில் இருக்கும் மதுபானக்கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். 8ஆவது வார்டில் ஈஸ்வரன் கோயில் பின்புறம் தனி யார் நிலத்தை பொதுமக்கள் பயன் பாட்டிற்கு வழித்தடமாக மாற்ற, நில உரிமை ஆவணங்களை ஒப்படைப் பதாக மனு அளிக்கப்பட்டும் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படாததை சுட்டிக் காட்டப்பட்டது. மேலும், உடனடியாக அதனை பேரூராட்சி மன்றம் ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியும். சோமையம் பாளையம் பஞ்சாயத்து பகுதியில் பழுதடைந்து கிடக்கும் சாலைகளை உடனடியாக போர்கால அடிப்படை யில் சாலைகளை அமைத்துத்தர வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் யு.கேசிவஞானம், கே. அஐய்கு மார், பெரியநாயக்கன்பாளை யம் ஒன்றியம் செயலாளர் மோகன்ராஜ், பிஎன்பி பேரூராட்சி கவுன்சிலர் என்.சிவராஜன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.