districts

img

குடிநீர் கேட்டு மகாராஜபுரத்தில் சிபிஎம்-மக்கள் ஆர்ப்பாட்டம்

திருவில்லிபுத்தூர், ஏப்.28- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என தொடர்ந்து பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 6 மற்றும் 7 ஆவது வார்டு பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும் ,சுகாதார வளாகம் பராமரிப்பின்றி காணப்படுவதாகவும் கூறி மகாராஜபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .அப்போது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க வேண்டும், முற்செடியில் நிறைந்து காணப்படும் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் கென்னடி தலைமை வகித்தார்.  ஜீவா மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.