மதுரை, மார்ச்.18- மதுரை மாநகராட்சி தமுக்கம் மைதா னத்தில் நடைபெற்று வரும் கலாச்சார மையம் மற்றும் அறிவுசார் மையத்தின் பணி களை மேயர், ஆணையாளர், துணை மேயர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் கலாச்சார மையம் மற்றும் தமுக்கம் மைதா னம் எதிரில் வாகன காப்பகத்தில் கட்டப் பட்டு வரும் அறிவுசார் மையம் ஆகிய கட்டுமான பணிகளை மேயர் வ.இந்திராணி, ஆணையாளர் மரு. கா.ப.கார்த்திகேயன், துணை மேயர் தி.நாகராஜன் ஆகியோர் வியாழனன்று ஆய்வு மேற்கொண்டனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமுக்கம் மைதனத்தில் கட்டப்பட்டு வரும் கலைய ரங்கத்தினை ரூ.47,72 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்து, கலாச்சார மையமாக மாற்றியமைக்க திட்ட மிடப்பட்டு கீழ் தளத்தில் 240 நான்கு சக்கர வாகனங்களும், 215 இரு சக்கர வாகனங் கள் நிறுத்தும் வகையிலும் மேலும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக பொருட்காட்சி நிகழ்ச்சிகள் 3,500 நபர்கள் பங்கு பெறும் வகையில் நவீன வசதிகளுடன் அரங்கமும், 800 நபர்கள் ஒரே நேரத்தில்அமர்ந்து உணவருந்தும் வகையில் உணவகமும் மற்றும் இதர அடிப்படை வசதிகள் மேற் கொள்ளும் வகையில் இறுதிகட்ட கட்டு மானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தமுக்கம் மைதானம் எதிரில் உள்ள வாகன காப்பகத்தை தற்போது சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ .2.50 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் நூலகம் கட்டப்பட்டு வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். இக்கட்டிடத்தின் தரை தளத்தில் பொது வாசிப்புஅறைகள், புத்தக அலமாரிகள், சிறுவர்களுக்கென தனி பகுதி, முதல் தளத்தில் பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் மேற் கொள்ளப்படவுள்ளது. இந்த ஆய்வில் நகரப்பொறியாளர், உதவி செயற்பொறி யாளர்கள், மக்கள் தொடர்பு அலுவலர், சுகாதார அலுவலர் மாமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.