விஷம் கொடுத்து நாய்கள் கொலை: வனக்காவலரிடம் சிறப்பு அதிகாரி விசாரணை மக்களுக்கு ஆதரவாக சிபிஎம் பங்கேற்பு
கடமலைக்குண்டு, ஏப்.29- தேனி மாவட்டம், வருச நாடு அருகே மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சனூத்து சோதனைச் சாவடியில் பணிபுரிந்து வருபவர் வனக்காவலர் செல்லதுரை (45).இவர் கோரையூத்து கிராமத்தை சேர்ந்த 7 பேருக்கு சொந்த மான 11 நாய்களை கோழிக் கறியுடன் விஷமருந்து கொடுத்து கொலை செய்த தாக கடந்த 6 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேனி மாவட்ட செயலா ளர் அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பாண்டி யன் உள்ளிட்ட கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் செல்லத்துரை மீது மயிலா டும்பாறை காவல் நிலை யத்திலும் புகார் அளித் துள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக உரிய விசா ரணை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டார். அதைதொடர்ந்து சனிக்கிழமை வனத்துறை சிறப்பு பாதுகாப்புகுழு வனச் சரகர் சாந்தினி தலைமையில் வனத்துறையினர் நாய்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசார ணைக்காக மேகமலை வனச்சரக அலுவலகத்திற்கு வந்திருந்தார். பின்னர் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் வனக்காவலர் செல்லத் துரை ஆகியோரிடம் தனித் தனியாக விசாரணை மேற் கொண்டார். விசாரணை தொ டர்பான அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப் படும் என வனச்சரகர் தெரி வித்தார். விசாரணையை தொ டர்ந்து பொதுமக்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவ சாயிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் போஸ் உள்ளிட்ட கட்சியினர் மேக மலை வனச்சரக அலுவல கத்திற்கு வந்திருந்தனர்.
சிபிஎம் தாலுகா செயலாளர் மீது காவல்துறை பொய் வழக்கு வாபஸ் பெற வலியுறுத்தல்
விருதுநகர், ஏப்.29- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி யில் சிபிஎம் தாலுகா செயலாளர் மீது காவல்துறை பொய் வழக்கு பதிந்துள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு வன்மையாக கண்டித்துள் ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : காரி யாபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது கம்பிக் குடி ஊராட்சி. இங்கு 100 நாள் வேலைத் திட்டப் பணித்தள பொறுப்பாளரை நிய மிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையையொட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சிபிஎம் தாலுகா செயலாளர் ஏ.அம்மாசி, தாலு காக்குழு உறுப்பினர் ஏ.குமராண்டி உள்ளிட் டோர் மனு அளிக்கச் சென்றனர். அப் போது அங்கு வந்த தரகனேந்தல் என்ற கிராமத்தைச் சேர்ந்த சிலர் மனு அளிக்கச் சென்றவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடமும் சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், வட்டார வளர்ச்சி அலு வலகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டவர் களை விட்டு விட்டு, சமாதானமாக பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது ஒரு தரப்பினருக்கு ஆதரவாக வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதை யடுத்து, சிபிஎம் தாலுகா செயலாளர் ஏ.அம்மாசி, தாலுகா குழு உறுப்பினர் குமராண்டி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே, மாவட்ட காவல்துறை, பொய்யாக புனையப்பட்ட வழக்கை ரத்து செய்வதோடு, முறையாக விசாரணை செய்து, தவறாக நடந்து கொண்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மே தினத்தன்று ஊதியத்துடன் விடுப்பு வழங்குவதை உறுதி செய்திடுக! சிஐடியு வலியுறுத்தல்
விருதுநகர், ஏப்.29- தொழிலாளர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மே தினத்தன்று ஊதியத்துடன் விடுப்பு அளிப்பதை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உறுதி செய்திட வேண்டுமென சிஐடியு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா, மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: மே.1 தொழிலாளர் தினமாகும். இந்நாளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் விடுமுறை விடுப் பட்டுள்ளதா என்பதை மாவட்ட நிர்வாகம் கண்கா ணித்திட வேண்டும். குறிப்பாக பட்டாசு, தீப்பெட்டி, பஞ்சாலை, அச்சு, விசைத்தறி ஆலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். மேலும், மே தினத்தன்று விடுமுறை வழங்காமல் இயக்கப்படும் ஆலைகள் மீது மாவட்ட நிர்வாகம் கடுமை யான நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
குருவிக்காரர் சமூக மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கிடுக! இராமநாதபுரம் ஆட்சியரிடம் சிபிஎம் மனு
இராமநாதபுரம்,ஏப்.29- இராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் குரு விக்காரர் சமூக பழங்குடியினரின் குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் பி செல்வராஜ் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், இராமநாதபுரம் மாவட்டத்தில் குருவிக்காரர்கள் என அழைக்கப்படும் குருவிக்காரர் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள், இவர்கள் மன்னர் காலம் தொட்டு விவசாயங்களை அழித்திடும் குருவிகளை பிடிப்பதற்காக வந்தவர்கள் ஆவர். தற்போது குருவிக்காரர்களின் குடும்பங்களில் உள்ள பள்ளி. கல்லூரியில் படிக்கும் பிள்ளைகள் சாதிச் சான்றிதழ் கிடைக்கப்பெறாமல் உள்ளனர். இவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தி னர் தொடர்ந்து போராடி வருகிறோம் தற்போது நாடாளு மன்றத்தில் குருவிக்காரர், கணிக்கர், மலைக்குறவர், நரிக்குறவர் ,காட்டு நாயக்கர் உள்ளிட்ட பழங்குடியி னருக்கு சாதி சான்றிதழ் வழங்குவதற்கு சட்டம் இயற் றப்பட்ட அடிப்படையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி உள்ளது. இந்நிலையில் கடந்த 14- 3- 2023 அன்று இராமநாதபுரம் கோட்டாட்சியரிடம் 800-க்கும் மேற்பட்ட சாதிச்சான்றிதழ் கோரிக்கை மனுக்களை வழங்கி உள்ளோம் .இந்த ஆண்டில் பள்ளியில் சேர உள்ள மற்றும் படித்துக் கொண்டிருக்கிற, உயர் கல்விக்கு செல்கிற மாணவ மாணவியருக்கும் முழு மையாக படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு, இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலை பெறுவ தற்காக சாதி சான்றிதழ் அவசியமாகிறது. எனவே தாங்கள் தலையிட்டு தமிழக அரசு சட்டம் இயற்றிய அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து இந்த கல்வி ஆண்டிலேயே குருவிக்காரர் சான்றிதழ் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரேசன் கடையில் முறையாக பொருள்கள் வழங்கிடுக! குடிமைப்பொருள் அதிகாரியிடம் சிபிஎம் மனு
மதுரை, ஏப்.29- மதுரை மாநகராட்சி 50 ஆவது வார்டு திருமலைராயர் படித்துறை, தைக்கால் பகுதியில் உள்ள சிம்மக்கல் கிளை யில் ( CB0014 )பாண்டியன் கூட்டுறவு சிறப்பு அங்காடி உள்ளது. இந்த ரேசன்கடையில் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. பாமாயில் மாதந்தோறும் வழங்கப்படுவதில்லை .இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தான் வழங்கப்படுகிறது. இலவச அரிசி 8 கிலோ தான் வழங்கப்படுகிறது. பச்சரிசி, கோதுமை மாதத்தின் முதல் வாரம் மட்டும்தான் விநியோகம் செய்கிறார்கள். அதற்குப் பிறகு கேட்டால் பொருள் இல்லை என்று கூறுகிறார்கள். இலவச வேட்டி, சேலை 50 சதவீதத்திற்கும் மேல் வழங்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் கோரிக்கையினை மனுவாக எழுதி, அவர்களிடம் கையெழுத்துக்களை பெற்றனர். பின்னர் மதுரை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் அதிகாரியிடம் கட்சியின் பகுதிக்குழு செயலாளர் பி. ஜீவா தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர் பி. கோபிநாத் பகுதிக்குழு உறுப்பினர் ஜீவகலா, கிளைச் செயலாளர் எஸ். செல்லம்மாள், ஆர் கல்பனா ஆகியோர் மனுவை அளித்தனர்.
மரத்தில் தொங்கும் மின்வயர்கள் : மக்கள் அச்சம்
சின்னாளப்பட்டி,ஏப்.29- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சின்னாளப்பட்டி கடைவீதியில் கடந்த பல மாதங்களாக மரத்தில் மின்வயர்கள் தொங்கிக்கொண்டுள்ளன. இதுகுறித்து சின்னாளப்பட்டி மின்சார வாரி யத்திற்கு தகவல் கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கை யும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த மின்வயரால் மக்கள் அச்சம டைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில். கடந்த பல மாதங்களாகவே மரத்தின் மேல் மின்சார வயர்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. பலமுறை சின்னா ளப்பட்டி மின்சார வாரியத்திடம் சொல்லியும் எந்த பலனும் இல்லை .உடனடியாக மின்வயர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பண்ணைப்புரம் பேரூராட்சியில் அலட்சியம் தண்ணீர் பிடிக்க சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
தேனி,ஏப்.29- பண்ணைப்புரம் பேரூராட்சியில் தண்ணீர் பிடிக்க சென்ற வாலிபர் மின்சா ரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தேனி மாவட்டம், பண்ணைப்புரம் பேரூராட்சி ,கரியணம்பட்டியில் பொது மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் சின்டெக்ஸ் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் உள்ள குழாயில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையறியாத அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ராஜேஷ்(21) என்பவர் குழாயை திறந்த போது மின்சாரம் பாய்ந்து உயிரி ழந்தார்.பண்ணைப்புரம் பேரூராட்சி யின் அலட்சியத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் பயன்படுத்தும் சுகாதார வளாக செப்டிக் டேங்கிற்குள் இரண்டு குழந்தைகள் விழுந்து உயிரிழந்த னர்,இந் நிலையில் மேலும் ஒரு உயிர் பலியானது மாவட்ட நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.