மதுரை, ஜன.29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீக்கதிர் மதுரை பதிப்பு இடைக்கமிட்டி 11 ஆவது மாநாடு ஜனவரி 26 புதன்கிழமை யன்று மூத்த எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் வளாகத்தில் (தீக்கதிர் அலுவலகம்), மூத்த தலைவர்கள் ஏ.அப்துல் வஹாப், வெ.சுந்தரம் நினைவரங்கத்தில் நடைபெற்றது. குடியரசு தினத்தை முன் னிட்டு தேசியக்கொடியை மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.பெரு மாள் ஏற்றி வைத்தார். கட்சிக் கொடியை இடைக்கமிட்டி உறுப் பினர் ஆர்.உமாபதி ஏற்றினார். மாநாட்டிற்கு ஜோ.ராஜ்மோகன், மாரிமுத்து,செல்வி ஆகியோர் தலைமை வகித்தனர். இடைக் கமிட்டி உறுப்பினர் ஷீலா வர வேற்றார். அஞ்சலி தீர்மானத்தை நித்யா வாசித்தார். மாநாட்டை துவக்கி வைத்து கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் உரையாற்றினார். இடைக்கமிட்டி செயலாளர் ப. முருகன் வேலை-வரவுசெலவு அறிக்கை சமர்ப்பித்தார். மாநி லச் செயற்குழு உறுப்பினர் மதுக் கூர் ராமலிங்கம் வாழ்த்திப் பேசி னார். மாநிலச் செயற்குழு உறுப்பி னர் எம்.என்.எஸ்.வெங்கட்ட ராமன் நிறைவுரையாற்றினார்.
செல்வக்குமார் நன்றி கூறினார். மாநாட்டில் 7 பேர் கொண்ட இடைக்கமிட்டி தேர்வு செய்யப் பட்டது. இடைக்கமிட்டிச் செய லாளராக ஜோ.ராஜ்மோகன் தேர்வு செய்யப்பட்டார். பாஜக ஆட்சியில் பத்திரிகை யாளர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் ஊடகச் சுதந்தி ரத்தைப் பறிக்கும் நடவடிக்கை களை ஒன்றிய ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். ஊடகத்துறை யில் பணியாற்றி ஓய்வுபெறும் அனைத்து செய்தியாளர்கள், அனைத்து உழைக்கும் பத்தி ரிகையாளர்களுக்கும் ஓய்வூதி யம் வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தியும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.