திண்டுக்கல், மே 28- திண்டுக்கல் கரூர் ரோட் டில் ரயில்வே இருப்புப் பாதை கீழே அமைக்கப்படும் சுரங்கப் பாதைப்பணிகள் கடந்த 5 ஆண்டுகள் ஆகியும் நிறைவடையாமல் உள்ளது. உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண் டுக்கல் நகரத் தலைவர்கள் அமைச்சர் கே.என்.நேரு விடம் புகார் கொடுததனர். திண்டுக்கல் எம்.வி.எம். நகரில் உள்ள காவிரி கூட் டுக்குடிநீர் திட்ட அலுவலக வளாகத்தில் நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார் பாக ரூ.132.52 கோடி மதிப் பீட்டில் திட்டப்பணிகள் துவக்கவிழா நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங் கேற்ற அமைச்சர் கே.என். நேருவிடம் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் பி.ஆஸாத், நகரச்செயலாளர் ஏ.அரபு முகமது, சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் மாரியம் மாள், ஜோதிபாசு, நகர்க்குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஆகி யோர் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் கே.என்.நேரு உட னடியாக நடவடிக்கை எடுப்ப தாகவும் விரைவில் சுரங்கப் பாதை திறக்கப்படும் என்று தெரிவித்தார். ஊரக வளர்ச் சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, பழனி சட்ட மன்ற உறுப்பினர் ஐ.பி.செந் தில்குமார் ஆகியோர் உடனி ருந்தனர்.