நாகர்கோவில், மே 15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமியின் இணையர் ற்றி. லலிதா நோயினால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலை யில் ஞாயிறன்று இரவு காலமானார். அன்னாரின் இறுதி நிகழ்ச்சிகள் திங்க ளன்று (மே 15) மாலை முஞ்சிறை வட்டாரம் காஞ்சாம்புறம் அருகே உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது. கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.நூர் முகம்மது, க.கனகராஜ் கேரள மாநில செயற்குழு உறுப்பினர் ஆனாவூர் நாகப்பன், கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் ஆன்ஸிலின், ஹரிந்த ரன் குமரி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பி னர்கள், மாநிலக் குழு உறுப்பினர்கள் கே.ஜி.பாஸ்கரன், கற்பகம், மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறு முகம், மாநிலக்குழு உறுப்பினர் பி.பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.அர்ச்சுனன், தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினர் கள், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிறின்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட மக்கள் பிரதி நிதிகள், அரசியல் கட்சி தலைவர்கள் ஏராளமானோர் மலரஞ்சலி செலுத்தினர். சிபிஎம் தமிழ்நாடு மாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன், சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கரு மலையான், மாநில பொதுச் செயலா ளர் ஜி.சுகுமாறன் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் தொலைபேசியில் இரங்கல் தெரிவித்தனர்.