districts

img

சொத்து வரி உயர்வை ரத்து செய்திடுக!

மதுரை, ஏப். 12-  ஆறு ஆண்டுகளுக்குப் பின்  மதுரை மாநகராட்சி முதல் கூட்டம் ஏப்ரல் 12 செவ்வாயன்று நடை பெற்றது. கூட்டத்துக்கு மேயர் வ. இந்திராணி, ஆணையர் கா.ப. கார்த்திகேயன், துணை மேயர் டி.நாக ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் மேயர் வ.இந்திராணி பேசும்போது, மத்திய நிதி ஆணை யம் 2022 - 23 முதல் ஒன்றிய அர சிடம் இருந்து உள்ளாட்சி அமைப்பு களுக்கு மானியம் பெறுவதற்கு சொத்து வரியை சீராய்வு செய்ய  வேண்டும். சொத்து வரி வசூலில்  முன்னேற்றம் காண வேண்டும் என் பன உள்ளிட்ட நிபந்தனைகளை அறி வித்துள்ளது. அதன்படி மதுரை மாந கராட்சியில் சொத்து வரி சீராய்வு செய்யப்பட வேண்டும். மதுரை மாநக ராட்சி செலுத்த வேண்டிய மின் கட் டண நிலுவை ரூ.52.29 கோடி, பிற துறைகளுக்கு செலுத்தவேண்டிய நிலுவை ரூ202.45 கோடி திட்டங்க ளுக்கான பங்குத்தொகை ரூ.67.75 கோடி உள்பட ரூ.730 கோடி தேவைப் படுகிறது என்றார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் உரிய இருக்கைகள் எதிர்க்கட்சிக்கு ஒதுக்கவில்லை. வீட்டு வரி உயர் வுக்கு எதிராக வெளிநடப்பு செய்கி றோம் என்று கூறி அதிமுக மாமன்ற குழு தலைவர் சோலை எம். ராஜா  தலைமையில் மாமன்ற உறுப்பினர் கள் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து மண்டலத் தலைவர்கள், உறுப்பினர்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தனர்.

கிழக்கு மண்டலத் தலைவர் வாசுகி சசிகுமார், கிழக்கு மண்ட லத்துக்கு தனியாக அலுவலகம் இல்லை. அலுவலகத்தை விரைவில் அமைக்க வேண்டும். விரிவாக்கப் பகுதிகளில் பாதாளச்சாக்கடை, குடி நீர் குழாய் போன்ற பணிகள் நடை பெறுகின்றன. இந்தப்பணிகளில் ஒருங்கிணைப்பு இல்லை. ஒருங்கி ணைத்து பணிகள் மேற்கொண்டால் விரைவில் அப்பகுதிகளில் சாலை கள் அமைக்க முடியும். உதவிப் பொறியாளர்கள் பொறுப்பை தட்டிக்கழிக்கின்றனர் என்றார்.  தெற்கு மண்டலத் தலைவர் முகேஷ் சர்மா ,கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை காண ஏராளமான பக்தர்கள் தென்கரை வழியாக வைகை ஆற்றுக்கு வருவது வழக் கம். ஆனால் தற்போது ஓபுளா படித்துறை முதல் கோரிப்பாளையம் வரை வைகை ஆற்றுக்குள் பக்தர் கள் இறங்குவதற்கு வழியில்லை. எனவே தற்காலிகமாக பாதை அமைக்க வேண்டும். தெற்கு மண்ட லத்துக்குள்பட்ட 18 வார்டுகளில் குடி நீர் பிரச்சனை உள்பட ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. மண்டல அலுவலகத்துக்கு வந்த மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு தீர்வு காணப்பட வேண்டும். வடக்கு மண்டலம் சரவண புவ னேஸ்வரி, மாமன்ற கூட்டம் நடை பெறும்போது மேயர் முதலில் மண்ட லத் தலைவர்கள் பேசுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். மண்டல அளவிலான ஆலோசனைக்கூட்டங் களுக்கு மண்டலத் தலைவர்களை அழைப்பது இல்லை என்று கூறினார்.  காங்கிரஸ் எஸ்.எஸ்.போஸ், மது ரையின் மிகப்பெரிய கண்மாயான மாடக்குளம் கண்மாயில் ஆண்டு முழுவதும் நீர் இருப்பு இருக்குமாறு பராமரிக்க வேண்டும். இதன்மூலம் மதுரை நகரின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகும். மேலும் படகு சவாரி விடு வதன் மூலம் சுற்றுலா தலமாகவும் மாறும். மாநகராட்சிக்குள்பட்ட 71,72 வார்டுகளில் மாநகராட்சிக்குச் சொந்தமான 151 ஏக்கர் இடம் உள் ளது. இங்கு மிருகக்காட்சி சாலை அமைக்க வேண்டும். இதன்மூலம் வருவாய் , வேலை வாய்ப்பு பெருகும் என்று கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நா. விஜயா பேசுகையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தமிழக அரசு தற்போது உயர்த்தியுள்ள சொத்து வரி உயர்வினை ரத்துச் செய்திட வேண்டும் கொரோனா பெரும் தொற்று காலத்தில் மக்கள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ள நிலையில் இது போன்ற அதிகப்படி யான வரிச்சுமை மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் .எனவே ஒன் றிய அரசு உள்ளாட்சி களுக்கு வழங்க வேண்டிய நிதியினை உடனடி யாக பெற வேண்டும். மாநகராட்சிக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து வரவேண்டிய கோடிக்கணக்கான வரி பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். டி. குமரவேல் பேசுகையில், செல்லூர் கண்மாயை தூர வார அரசு நிதி ஒதுக்கியுள்ளது. எனவே பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரிவிக்க வேண்டும். பாதாள சாக்கடை கழிவு நீர் தெரு பகுதி களில் அதிகமாக தேங்குகிறது. எனவே அவற்றை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மழைக்காலம் என்பதால் தெரு பகுதி களில் அதிகளவில் மழைநீர் தேங்கு கிறது மழைநீர் செல்லும் கால்வாய் களை உடனடியாக சீரமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.  விசிக முனியாண்டி, மாடக் குளம் கண்மாயில் மீன் குத்தகை வழங்கப்பட்டு தண்ணீர் வெளியேற் றப்பட்டு மீன் பிடிக்கப்படுகிறது. மீன் பிடிக்கும் அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமுக்கத்தில் கட்டப்பட்டு வரும் கலை யரங்கில் புதிதாக விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மாநராட்சிக்கு சொந்தமான இடத்தில் மதச்சார்பற்ற தன்மை இருக்க வேண்டும். எனவே அங்கு கண்ணகி சிலையை வைக்க வேண்டும் என்றார். இதேபோல குடி நீர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர். இதற்கு மேயர் வ.இந்திராணி, ஆணையர் கா.ப.கார்த்திகேயன் ஆகியோர் பதில ளிக்கும் போது, மண்டலத் தலைவர் கள், உறுப்பினர்களின் கோரிக்கை கள் குறித்து பரிசீலிக்கப்படும் என்றனர். 

வாய் திறக்காத பாஜக உறுப்பினர்

ஒன்றிய அரசு உயர்த்திய வரி  உயர்வை பற்றி பேசாமல் மதுரை யில் செயல்படுத்தாமல் உள்ள திட்டங்களைப் பற்றி பேசாமல் பாஜக உறுப்பினர் பூமா ,மதுரை நகருக்கு ஒன்றிய அரசின் சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் மாநகராட்சியில் பிரதமர் நரேந்திர மோடி படம் வைக்கப்படவில்லை. எனவே பிரதமரின் படத்தை வைக்க வேண்டும் என்றார்.  அப்போது காங்கிரஸ் உறுப்பி னர் எஸ்.எஸ்.போஸ் குறுக்கிட்டு, ஒன்றிய அரசு அளித்த சீர்மிகு நகர்த் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் தான் இருந்தது. அது தற்போதுதான் சரிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல ஒன்றிய அரசு மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை வழங்கவில்லை. ஒரே ஒரு செங்கல் தான் வழங்கியுள்ளது .மோடி அவர்கள் மதுரை மக்களுக்கு அப்படி என்ன நல்ல திட்டங்களை செய்துள்ளார் என்று கேள்வி எழுப்பினார்.