districts

விருதுநகர் சேவைச் சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் சுகாதாரச்சீர்கேடு

விருதுநகர், ஜூன் 7- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திலிருந்து சூலக்கரை செல்லும் சேவைச் சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. உடனடியாக தடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. விருதுநகர்-சாத்தூர் 4 வழிச் சாலை யோரத்தில் உள்ளது ரிசர்வ்லைன் பகுதி.  இங்குள்ள சேவைச் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. விசேஷ காலங்களில் ஏராளமான கழிவு நீர் சாலையில் செல்கி றது. இதனால் இங்கு துர்நாற்றம் வீசுவ தோடு சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே, இச்சாலையில் நாள்தோறும் சென்று வரும் ஆயிரக்கணக்கான வாகன  ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து கூரைக்குண்டு ஊராட்சி நிர்வாகத்திற்கு சிஐடியு சார்பில் புகார்  மனு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால்,  ஊராட்சி நிர்வாகமோ, இது நெடுஞ்சாலைத்  துறை பகுதி. எனவே , அவர்கள் தான் சரி  செய்ய வேண்டும் எனக் கூறிவிட்டது. இதையடுத்து, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எம்.அசோகன், நெடுஞ்சா லைத்துறைக்கு புகார் மனு அனுப்பி யுள்ளார். அதன் பிறகு வந்த நெடுஞ்சா லைத்துறை அதிகாரி அப்பகுதியை மட்டும் பார்வையிட்டதோடு சென்றுள்ளார். உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பின்பு, மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டது. அதன்  பின்பு, காவல்துறையினர் வந்து விசா ரணை மட்டும் செய்துள்ளனர். எனவே, சேவைச் சாலையில் செல்லும்  கழிவு நீரை தடுத்து நிறுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  ஜூன் 8 இல் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்  கமும், ஜூன் 9 இல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.