districts

img

விதை நெல் முளைக்கவில்லை சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் புகார்

சிவகங்கை, அக்.31-  சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியைச் சுற்றியுள்ள பொன் னாம்பட்டி, சூரக்குளம், மஸ்தான்பட்டி, அரசனிப்பட்டி, மதுக்கோட்டை, குளத்  துப்பட்டி கிராமங்களைச் சேர்ந்த விவ சாயிகள் வேளாண்மைத் துறை மூலம் வாங்கிய விதை நெல் முளைக்கவில்லை. ஒரு முறை அல்ல மூன்று முறை விதைத் தும் முளைப்புத்திறன் ஏற்படவில்லை, பொன்னாகுளத்தில் மட்டும் 650 ஏக்கரில் விதைக்கப்பட்ட விதை முளைக்க வில்லை. இப்பிரச்சனையில் வேளாண்  மைத்துறையும், மாவட்ட ஆட்சியரும் தலை யிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆர்.கே.தண்டியப்பன் ஆட்சியரிடம் திங்க ளன்று மனு அளித்தார்.