districts

img

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சிபிஎம் வேட்பாளர்கள்

அருப்புக்கோட்டை, பிப்.23- விருதுநகர் மாவட்டம் அருப் புக்கோட்டை 16ஆ வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட ணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எஸ்.கே.பாலசுப்பிரமணியன் வெற்றி பெற்றார்.  இதையடுத்து, திருநகரம் பகுதியில் உள்ள வாக்காளர் களுக்கு வீடு, வீடாகச் சென்று அவர் நன்றி தெரிவித்தார். இந் நிகழ்ச்சியில், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.தாமஸ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. அன்பு செல்வன், எஸ்.பூங் கோதை, எம். கணேசன், நகர் செயலாளர் எஸ்.காத்தமுத்து, நகர் குழு உறுப்பினர்கள் கே. சுப்பிரமணி, எம். மணிமேகலை, எஸ்.பழனிச்சாமி, கிளைச் செயலாளர் பெரியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.  இதேபோல் விருதுநகர் நக ராட்சி 24 ஆவது வார்டில் வெற்றி பெற்ற சிபிஎம் வேட்பாளர் கே. ஜெயக்குமார் பாத்திமாநகர், பிள்ளையார் கோவில் தெரு பகு தியில் வாக்காளர்களுக்கு இனிப்பு கள் வழங்கி நன்றி தெரிவித்தார்.  இதில், மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஜி.வேலுச்சாமி, நகர் செய லாளர் எல்.முருகன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.முத்து வேலு, எம்.ஜெயபாரத், என்.உமா மகேஸ்வரி, நகர்குழு உறுப்பி னர்கள் பி.ராஜா, ஐ.ஜெயா, ராஜேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.