districts

img

சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் கூட்டணி தலைவர்களுடன் வாக்கு சேகரிப்பு

மதுரை, மார்ச் 31- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொ குதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் மதுரை தெற்கு தொகுதியில் ஞாயிறன்று திமுக மாவட்டச் செயலாளரும் வடக்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினருமான கோ. தளபதி, மதிமுக தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் மு.பூமிநாதன் ஆகியோர் தலைமையில் வார்டு - 30 ல் இருந்து வாக்கு சேகரிப்பு பிரச் சாரத்தில் ஈடுபட்டார். 

தொடர்ந்து இந்திரா நகர், பி.டி.காலனி, ஆசாரி தோப்பு சூமேக்கர் தெரு, மதிச்சியம், வார்டு 29 ஆழ்வார்புரம் வைகை வடகரை, செல்லூர் மார்க்கெட், மேலத்தோப்பு, கீழத் தோப்பு. வார்டு 49 நெல்பேட்டை, காயிதே மில்லத் 1-ஆவது தெரு, முனிச்சாலை ரோடு, இஸ்மாயில்புரம், வார்டு 48, பூந் தோட்ட தெரு, கான்பாளையம் தெரு, அரச மரம் பிள்ளையார் கோவில், பழைய குய வர்பாளையம், தினமணி தியேட்டர் அருகில் நிறைவடைந்தது. 

பிரச்சாரத்தில் வேட்பாளர் சு.வெங்கடே சன் பேசுகையில், ‘‘தெற்கு தொகுதிக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் பல்வேறு நல்ல திட்டங்களை செய்துள்ளேன். குறிப்பாக தெப்பக்குளம் பகுதி உயர் மின் கோபுர விளக்குகள், அதேபோல் திரைப்பட பின்னணி பாடகர் டி.எம்.எஸ் சிலை அருகில் உயர் மின் கோபுர விளக்கு, இப்பகுதிகளில் உள்ள வார்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பல்வேறு அடிப்படை கட்டமைப்புகள் செய் யப்பட்டுள்ளன. மீண்டும் என்னை தேர்வு செய்தால் மேலும் பல்வேறு வளர்ச்சி பணி களை தொடர்வதற்கும் மதுரையை வளர்ச்சி அடைந்த மாவட்டமாக கொண்டு செல்வ தற்கும் முயற்சிகள் மேற்கொள்வேன். எனவே, அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்’’ என்று பேசினார்.

பிரச்சாரத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் பெ.குழந்தை வேலு, திமுக மாநில தணிக்கைக் குழு உறுப்பி னர் வி.வேலுசாமி, மண்டலத் தலைவர் மா. முகேஷ்சர்மா, மாவட்டப் பொருளாளர் ஈ. முருகவேல் மற்றும் பகுதிச் செயலாளர்கள் அ. அன்வர்உசேன், ஆர்.எம்.முத்து, பரமேஷ் குமார் (எ) ஜீவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் கருமலை யான், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன், மாநில குழு உறுப்பினர்கள் மகாலட்சுமி, இரா.விஜயராஜன், கற்பகம், திருச்செல்வம், மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஜா.நரசிம்மன், அ.ரமேஷ், துணை  மேயர் தி.நாகராஜன், பகுதிக்குழு செயலா ளர்கள் வி.கோட்டைச்சாமி, ஜெ.லெனின், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் அருண், ஆட்டோ தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் சிவாஜி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கார்த்திகே யன், விசிக வடக்கு மாவட்டச் செயலாளர் சுடர் மொழி, தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் ஆதவன், மக்கள் நீதி மய்யம் மண்டலச் செயலாளர் அழகர், திராவிட கழக மாவட்டச் செயலாளர் செல்வம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், வல்லரசு ஃபார்வர்டு பிளாக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.