districts

img

பெத்தானியாபுரத்தில் சிபிஎம் முற்றுகைப் போராட்டம்

மதுரை, மார்ச் 22-  பெத்தானியாபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள 63-ஆவது வார்டுக்கு உட்பட்ட கழிவு நீரேற்று நிலையத்தை மாற்றி அமைக்க வேண்டும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் பயன்படுத்தி வந்த சிறுவர் பூங்காவினை சீரமைத்து குழந்தைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், அண்ணா மெயின் வீதி சாலை போடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு - 1ஆம் பகுதி குழு சார்பில் பெத்தானியாபுரம் கழிவு நீரேற்று நிலையம் முற்றுகை போராட்டம் புதனன்று நடைபெற்றது.  போராட்டத்திற்கு பகுதி குழு செயலாளர் கு.கணேசன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பி னர் ஜா.நரசிம்மன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், 23-ஆவது வார்டு மா மன்ற உறுப்பினர் டி.குமரவேல், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பி.சிவராமன், பி.மல்லிகா மற்றும் பகுதிக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.  அப்போது மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், ‘‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுக்கு எதிராக போராடுகிறது போன்ற தோற்றத்தை சிலர் ஏற்படுத்துகின்றார். அது சரி யல்ல; இது மக்களுக்கான போ ராட்டம். அண்ணா முக்கிய வீதி சாலையையும், அம்மா பூங்காவை யும் சீரமைத்து மக்கள் பயன் ghட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்ற அடிப்படையில் தான் போராட்டம் நடைபெறுகிறது’’ என்றார்.  போராட்டத்தில் ஈடுபட்டவர்க ளிடம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடி யாக தங்களுடைய கோரிக்கைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.