நாகர்கோவில், மார்ச் 26- தேசிய அளவில் மார்ச் 28-29 தேதிகளில் நடபெறும் பொதுவேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க சிபிஎம் வேண்டுகோள் விடுத்துள் ளது. இதுகுறித்து கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி வெளி யிட்டுள்ள செய்திக்குறிபில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளாக மோடி அரசாங்கம் தனியார்மய, தாராளமய கொள்கைகளை மூர்க்கத்தனமாகவும், அதி வேகமாகவும் அமுல்படுத்தி வருகிறது. இந்திய நாட்டின் விவசாயத்தையும், பொதுத்துறைகளையும் ஒட்டு மொத்தமாக தேசீய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் உள்நாட்டு பன் னாட்டு பெருமுதலாளிக ளுக்குக் காவு கொடுக்க முடிவெடுத்துள்ளது. எல்.ஐ.சி.யின் பங்கு களை தனியாருக்கு வெளி யிடவும், வங்கிகளை இணைத்து தனியார்மய மாக்கவும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை முடமாக்கவும் இதர நாட்டின் பொதுத் துறைகளின் சொத்துக்களை விற்கவும் வேகமாகச் செயலாற்றி வருகிறது. இந்த வரிசையில் ஏர் இந்தியா நிறுவனத்தை வெறும் 18,000 கோடி ரூபாய்க்கு டாடாவுக்கு விற்று விட்டது. இன்றைய தினத்தில் சொந்த விமான நிறுவனம் இல்லாத நாடாக இந்தியா உள்ளது. இந்தத் தொகையும்கூட வங்கிக் கடனாக அவருக்கு அளிக் கப்பட்டு பின்னாளில் தள்ளுபடியும் செய்யப்பட்டு விடும்.
மேலும், முறைசாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டங்களைக் கொண்டு வர நாம் வலியுறுத்தி வரும் போது, 44 தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி 4 சட்டத் தொகுப்புகளாக்கி அவற்றை முடக்குவது உள்ளிட்ட தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. எனவே மோடி அர சாங்கத்தின் மக்கள் விரோத – விவசாய விரோத – தொழி லாளர் விரோத நடவடிக்கை களைக் கைவிடக் கோரி, 12 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து, சிஐடியு-ஏஐடியுசி உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்களும், எல்.ஐ.சி., வங்கி, பி.எஸ்.என்.எல்., போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட துறை வாரி சங்கங்களும் எதிர் வரும் 28,29 தேதிகளில் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆயத்தமாகி வருகின்றன. அதனை ஒட்டி மறியல் போராட்டம் உள்ளிட்ட இயக்கங்களுக்கு அகில இந்திய விவசாயி கள் சங்கம், விவசாயத் தொழி லாளர் சங்கம் மற்றும் வர்க்க வெகுஜன ஸ்தாபனங்களும் ஆயத்தமாகி வருகின்றன. குமரி மாவட்டத்தில் திட்ட மிடப்பட்டுள்ள அனைத்து இயக்கங்களையும் வெற்றி கரமாக நடத்தி, தேசம் காக்கும் போராட்டமான அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை வெற்றி பெற செய்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டக்குழு அறைகூவல் விடுக்கிறது. இவ் வேலை நிறுத்தத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.