இராமநாதபுரம்,ஜன.22- தியாகி இமானுவேல் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சமூக நீதி போராளி பூ.சந்திரபோஸ் அவர்கள் ஜனவரி 21 அன்று பரமக்குடியில் காலமானார் . அவரது இறுதிநிகழ்ச்சி ஜனவரி 22 அன்று பரமக்குடியில் நடைபெற்றது இறுதி நிகழ்ச்சியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார் பில் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, மாநிலக் குழு உறுப்பினர் எம். ஊர்காவலன், இராமநாத புரம் மாவட்ட செயலாளர் நா. கலையரசன், மாவட்ட தலை வர் டாக்டர் வான்தமிழ் இளம் பருதி, விருதுநகர் மாவட்ட தலைவர் எம்.முத்துக்குமார், சிவகங்கை மாவட்ட தலை வர் எஸ்.முத்துராமலிங்க பூபதி ,மாவட்ட செயலா ளர் ஆர்.வீரையா, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பி னர் கே.ஜி.பாஸ்கரன், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் வி.காசிநாத துரை, சிவகங்கை மாவட் டச் செயலாளர் ஆர்.கே. தண்டியப்பன், வாலிபர் சங்க இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் இ.தட்சி ணாமூர்த்தி ஆகியோர் நேரில் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.