districts

img

யூகலிப்ட்ஸ் மரக்கன்றுகளை நடுவதற்கு சிபிஎம், விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு

சிவகங்கை.நவ.10- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா உருளி விலக்கு அருகே யூக்லிப்ட்டிஸ் மரக்கன்று நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் .  விவசாயத்தை பாதிக்கிற யூகலிப்டஸ் மரக்கன்றுகள் நடக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்கூட்டத்தில் யூகலிப்டஸ் மரக்கன்றுகள் நடக்கூடாது என்று உத்தரவை தெரிவித்திருக்கிறார் . அவருடைய உத்தரவை மீறி வனத்துறை அதிகாரிகள் யூகலிப்டஸ் மரக்கன்றுகள் நடுவதற்கு அதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தனர். இத் தகவலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் விசுவநாதனிடம் விவசாயிகள் தெரிவித்தனர்.இதனைத் தொடரந்து மானாமதுரை ஒன்றிய செயலாளர் ஆண்டி ,சிஐடியு மாவட்ட தலைவர் வீரையா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் காசிராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆண்டி,ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜா ராமன், முருகானந்தம் ஆகியோர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு மரக்கன்று நடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.  இனிமேல் நடமாட்டோம் என வன அதிகாரி ராஜகுரு உறுதியளித்தார்.