தேனி, மார்ச் 23- குடிநீருக்கு அதீத கட்டணம் விதித்து செலுத்த இயலாதவர்களின் குடியிருப்பு களில் முன் அறிவிப்பு இல்லாமல் குடிநீர் இணைப்பை துண்டிக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேனி நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் ஏ.வி.அண்ணாமலை ,தாலுகா செயலாளர் இ.தர்மர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.நாகராஜ், ஜெயபாண்டி,உள்ளிட்ட நிர் வாகிகள் தேனி நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தனர் . அந்த மனுவில், குடிநீர் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில் சாதா ரண குடும்பத்தை சேர்ந்த மக்கள் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்க வேண்டும். கட்டணம் செலுத்தாதவர்களின் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பை துண்டிக்க கூடாது . கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.