districts

img

அடிப்படை வசதி கோரி சிபிஎம் மனுக் கொடுக்கும் போராட்டம்

வெம்பக்கோட்டை, டிச.16-  விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டை வட்டம்,  தாயில்பட்டி ஊராட்சி க்கு உட்பட்டது மண்குண்டாம்பட்டி. இங்குள்ள  ராமசாமி நகர் பொதுமக்க ளுக்கு குடிநீர்  தெருவிளக்கு,  சாலைவசதி, குப்பை தொட்டி ஆகிய அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, உடனடியாக அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. பின்பு, தாயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவரிடம் பொது மக்களின் கையெழுத் துக்கள் இடம் பெற்ற கோரிக்கை மனு வழங்கப்பட்து.  இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.குருசாமி, ஒன்றிய செயலா ளர் எம்.முனியசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் எம்.முத்துலட்சுமி,  கிளை செயலாளர் ஆர்.குருசாமி பா.கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.