திருவில்லிபுத்தூர், டிச.22- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஒன்றி யத்தில் மொட்டமலை அரு கில் உள்ள பகுதியில் 2003 ஆம் ஆண்டு கோபாலபுரம் ராமகிருஷ்ணாபுரம் ரோடு, வைத்திலிங்கபுரம், மம்சா புரம், ஆராய்ச்சி பட்டி உள் ளிட்ட கிராமங்களில் வீடு இல்லாதவர்களுக்கு அர சால் வழங்கப்பட்ட குடி மனை பட்டாவை புதுப்பித்து நில அளவை செய்து தர வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் காத்தி ருக்கும் போராட்டம் நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு கட்சியின் திருவில்லி புத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.வி.சசிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் எம்.திருமலை துவக்கி வைத்துப் பேசி னார். மாவட்ட செயலாளர் கே.அர்ஜுனன் நிறைவுரை யாற்றினார். நகரச் செயலா ளர் வி.ஜெயக்குமார், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் வி. சந்தனம், கே.பால்ச்சாமி, மாதர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் டி.ரேணுகா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது வட்டாட்சியர் அலுவலகத் தில் வட்டாட்சியர் தலைமை யில் தொடர்ச்சியாக இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடை பெற்றது. விரைவில் சம்பந் தப்பட்ட பட்டாதாரர்களை விசாரணை மேற்கொண்டு பட்டா உறுதியாக வழங்கப் படும் என்று எழுத்துப்பூர்வ மாக வட்டாட்சியர் உறுதி அளித்தார். இதைத்தொட ர்ந்து காத்திருக்கும் போராட் டம் தற்காலிகமாக ஒத்தி வைக் கப்பட்டது.