நாகர்கோவில், ஜூலை 1- கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி உட்பட்ட 21 வார்டுகளில் தற்போது குடிநீர் வடிகால் வாரியத்தால் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் நிலையில் சாலைகள் தோண்டப்பட்டு அனைத்து சாலைகளும் சேதம் அடைந்துள்ளன. இந்த பணி காலாவதி நாள் நவம்பர் மாதம் 31ஆம் தேதி 2021 முடிவடைந்த பிறகும் அதனை அடுத்த 8 மாத காலமாகியும் குடிநீர் குழாய் பதிக்கும் பணி முடிவடைவில்லை. இன்னும் 50 விழுக்காடு பணிகள் மீத முள்ளன. இதனால் தோண்டப்பட்ட சாலைகள் மூடப்படாமலும் போக்குவரத்துக்கு உபயோ கமற்ற மரண குழிகளாக இருப்பதனா லும் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளா கியுள்ளனர். மேலும் ஒழுங்கற்ற சாலை களால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதனால் நகராட்சி பணிகளையும் விரைவு படுத்த முடியாத ஒரு சூழல் நிலவி வருகிறது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு அனைத்து கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியர், டி டபுள் ஏ ஆர் டி போர்டு, துறை கோட்ட உதவி கோட்ட பொறியாளர் உள்ளிட்டோரிடம் வலியுறுத்தி மனு அளித்தனர். இந்நிகழ்வில் குழித்துறை நகராட்சி தலைவர் ஆசை தம்பி, துணை தலைவர் பிரவீன் ராஜா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வார்டு கவுன்சிலர்கள் சர்தார் ஷா, ஜூலியட் மெர்லின் ரூத், விஜய லக்ஷ்மி, லெலிதா, ஜலீலா ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.