திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சி ஐந்தாவது வார்டில் ஏரியா சபை பேரூராட்சித் தலைவரும் வார்டு கவுன்சிலுருமான பிரதீபா கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் நந்தகுமார், தலைமை எழுத்தர் கலியமூர்த்தி, திமுக ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் மற்றும் பேரூராட்சி அலுவலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். நான்காவது வார்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு கவுன்சிலர் ஜெயகிருஷ்ணன் தலைமை தாங்கினார் .