districts

மதுரை முக்கிய செய்திகள்

கொடைக்கானல்  சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

சின்னாளபட்டி, ஏப்.24- கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படு கிறது.   ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதை அனு பவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருகை தருகின்ற னர். இந்த நிலையில் சமீபகாலமாக கொரோனா பரவல்  அதிகரித்து இருப்பதன் எதிரொலியாக, முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்தது.  அதன்படி ஞாயிறு முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானலின் நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி யில் உள்ள சோதனைச்சாவடியில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனையின் முடிவில்  யாருக்கேனும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால்  அவர்களுக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர் களுக்கும் சிகிச்சை அளிக்கவும் சுகாதாரத்துறையினா் ஏற்பாடு செய்துள்ளனர்.

பழனியில் ரோப்கார் சேவை ரத்து'

பழனி, ஏப்.24- பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை  செவ் வாய், புதன் கிழமை இருநாட்கள் நிறுத்தப்படுகிறது. பக்  தர்கள் யானைப் பாதை, வின்ச் படிப்பாதையை பயன் படுத்தலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெண்ணுக்கு கொலை மிரட்டல்  சாமியார் மீது வழக்குப் பதிவு 

தேனி, ஏப்.24- தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் முருகன். இவர்  தனது வீட்டில் பில்லி சூனியம், நிர்வாண பூஜை நடத்தி வந்தார். இதனால் அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.  இவற்றை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து முருகன் பூஜையில் ஈடு பட்டுள்ளார். எனவே இது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த  குணவதி (65)  தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாள ரிடம் புகார் அளித்தார். இது குறித்து அவர் பேட்டியும் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் வீடு  புகுந்து குணவதியை தகாத வார்த்தைகளால் திட்டி  தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயம்  அடைந்த குணவதி தேனி க.விலக்கு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கம்பம் தெற்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான்கு மாதங்களாக சம்பளமின்றி தவிக்கும் “டெங்கு” தடுப்புப் பணியாளர்கள்

ஒட்டன்சத்திரம், ஏப்.25-  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே  உள்ள இடையக்கோட்டை, கொ.கீரனூர், கேதை யுறும்பு, சத்திரப்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள அரசு ஆரம்ப  சுகாதார நிலையங்களில் டெங்கு ஒழிப்புப் பணியா ளர்கள் இருபது பேர் பணியாற்றி வருகிறார்கள். இப்பணியில் ஈடுபடுவர்களுக்கு ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் மூலம் மாதம் தோறும் ஊதியம் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் நிதிப் பற்றக்குறை எனக் கூறி கடந்த  நான்கு மாதங்களாக டெங்கு பணியாளர்களுக்கு மாத  ஊதியம் வழங்காததால் டெங்கு பணியாளர்கள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு உடனடியாக நிலுவையிலுள்ள மாத ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

“பல்” வீர்சிங்கால் பல்லை இழந்தவரின் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவு

மதுரை, ஏப்.24-  காவல்துறை அதிகாரி பல் வீர் சிங்கால் பல் உடைக்கப்பட்ட அருண்குமார் தனது  வழக்கு விவரங்களை தனக்கு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்  செய்திருந்தார்.  அருண்குமார் தனது மனுவில் கூறி யுள்ளதாவது: என் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்டவிரோ தக் காவலில் வைத்து என்னை கடுமையாக  தாக்கினார்கள் எனது நான்கு  பற்களும்  உடைக்கப்பட்டன  பிறகு இந்த வழக்கில்  என்னை சிறையில் அடைத்தனர். இந்த  வழக்கில் என் மீது பதியபட்ட   வழக்கு விவ ரங்களை தர உத்தரவிடக் கோரி அம்பா சமுத்திர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுச் செய்தேன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்வில்லை எனக் கூறி எனது மனு  நிராகரிக்கப்பட்டது எனவே அம்பாசமுத்தி ரம் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து என்  மீது பதியப்பட்ட குற்ற வழக்கின் அனைத்து  விவரங்களையும் தர உத்தரவிட வேண்டும்  எனக் கூறியிருந்தார்.  இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி  இளங்கோவன் குற்றம் சாட்டபட்ட  அருண்  குமார்  வழக்கின் விவரங்களை கிழமை நீதி மன்றம் கொடுக்க  வேண்டும். அம்பா சமுத்திரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்து பெற்றுக்கொள்ளலாம் என உத்த ரவிட்டார்.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு  விசாரணையை 3 மாதத்தில் முடிக்க உத்தரவு

மதுரை, ஏப்.24-  சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை  வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையி லுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை  வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில்  உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின்  கோரி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளேன். இந்த வழக்கு சிபி சிஐடி காவல்துறை விசாரணை செய்து  பின் சிபிஐ காவல்துறையினர் விசாரணை  செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் உள்ள 132 சாட்சிகளில்,  நட்சத்திர சாட்சிகளான ரேவதி மற்றும் பியூலா உட்பட 47 சாட்சிகளை மட்டுமே இது வரை விசாரித்துள்ளனர். 47 சாட்சி களிடம் விசாரணை நடத்த ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளது. மீத முள்ள சாட்சிகளை விசாரிக்க இன்னும் குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகும். கடந்த மூன்று ஆண்டுகளாக நீதி மன்றக் காவலில் சிறையில் உள்ளேன். ஏற்க னவே பல முறை ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்  பட்டுள்ளது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்கும் பட்  சத்தில் நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடு களுக்கு உட்டுப்படுவேன்.” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசா ரணை இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது  இன்னும் ஆறு சாட்சிகளை மட்டுமே விசா ரணை செய்ய வேண்டியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் நான்கு மாதங் களாக குறுக்கு விசாரணை என்ற பெயரில்  வழக்கு விசாரணையை தாமதமாக்கி வரு கின்றனர். ஒரு சாட்சியை விசாரணை செய்வதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகிறது. எனவே மே மாத நீதிமன்ற விடுமுறை  காலத்திலும் இந்த வழக்கை கீழமை நீதி மன்றம் விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.  தொடர்ந்து ஜாமீன் மனுவை தள்ளு படி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும்  வழக்கு விசாரணையை மூன்று மாதங்க ளில் முடிக்கவும் உத்தரவிட்டார்.

வாலிபர் சங்கம்  கையெழுத்து இயக்கம் 

இராஜபாளையம், ஏப்.24- தமிழக அரசு திருமண நிகழ்வுகளிலும் விளையாட்டுப்  போட்டிகளின் போதும்  ஆட்சியரின் உரிமம் பெற்று மது  விற்றுக் கொள்ளலாம் என்று அரசாணை வெளியிட்டதைக்  கண்டித்தும் போதைக்கு எதிரான ஒரு கோடி கையெ ழுத்தை தீவிரப்படுத்தும் விதத்திலும் இராஜபாளை யத்தை அடுத்துள்ள சேத்தூரில் கையெழுத்து இயக்கம்  நடைபெற்றது. மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்  ராமர், ஒன்றியச் செயலா ளர் சந்தனகுமார், ஒன்றியத் தலைவர்  சந்திரகுமார்  ஒன்றியச்  பரமேஸ்வரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்ற னர்.

புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல்

மதுரை, ஏப்.24-  மதுரை வடக்கு சட்டமன்றத்குதி உறுப்பினர்  கோ.தள பதி, தமது சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து கைலாசபுரம்  தாகூர் நகர் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை  கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு செல்லூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே திங்களன்று நடைபெற்றது. நிகழ்வில் வடக்கு  சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, வடக்கு மண்டலத்  தலைவர் புவனேஸ்வரி, வடக்கு மண்டல உதவி ஆணை யாளர், வடக்கு மண்டல செயற் பொறியாளர் 23-ஆவது  வார்டு மாமன்ற உறுப்பினர்  டி.குமரவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு- 1 பகுதிக்குழு செயலாளர்  வி.கோட்டைச்சாமி, திமுக செல்லூர் பகுதிச் செயலாளர் குறும்பன், வட்டச் செயலாளர் பவுன்ராஜ் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

“மரம் வளர்க்க ஆசைப்பட்டால் மரங்கள் நடவு செய்ய ரெடி”

பழனி, ஏப்.24- பழனி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில நிலம் வைத்திருப்பவர்கள் தகவல் தந்தால் தமிழ்நாடு பசுமை யாக்கள் திட்டத்தின் கீழ் பழனி வனச்சரகம் கொடைக்  கானல் வனக்கோட்டம்  சார்பில் மகாகனி, தேக்கு, மலை வேம்பு, சிவப்பு சந்தனம் மரங்கள் வனத்துறை சார்பாக நடவு செய்து தரப்படும் என்று வனசரக அலுவலர் தெரி வித்துள்ளார். நாற்றுகள் தேவைப்படுபவர்கள் பழனி வனச்சரகர் பழனிக்குமார் கைபேசி எண்.  9787197169 பழனி வனவர் பிரேம்நாத் ஜெயசீலன் கைபேசி எண் 7373245703  தொடர்பு கொள்ளலாம்.

இழப்பீடு வழங்காததால்  அரசுப் பேருந்து ஜப்தி

விருதுநகர், ஏப் 25- விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சித்துராஜபுரம்  பாலாஜி நகரைச் சேர்ந்தவர் முனியாண்டி (60), இவருக்கு  ஜெயமணி, ராஜலட்சுமி, செல்வி, நிதயா, சங்கரேஸ்வரி முருகேஷ்வரி என ஆறு மகள்கள் உள்ளனர். இந்நிலை யில் கடந்த 2016-ஆம் ஆண்டு   பணி முடிந்து வந்த  முனி யாண்டி சித்துராஜபுரம் செல்ல  அரசுப் பேருந்தின் பின்  வாசலில் ஏற முயன்றார். அப்போது  நிலை தடுமாறி  கீழே விழுந்த அவர் பலத்த  காயமடைந்தார்.  மேல் சிகிச்சைக்கு மதுரை  அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதையடுத்து,  இழப்பீடு கோரி மகள்கள்,  விருது நகர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடாந்தனர். வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி 2022-ஆம் ஆண்டு மார்ச்29-ஆம் தேதி  ரூ.8 லட்சத்து 3 ஆயிரத்து 700 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். அதை விருதுநகர் போக்கு வரத்து கழகம் வழங்காததால் மீண்டும் 7.5 சதவீத வட்டி யுடன் சேர்த்து வழங்கக் கோரி  நிறைவேறுதல் மனு தாக்கல் செய்தனர். இந்தநிலையில்,   ரூ 11 லட்சத்து 25 ஆயிரம் வழங்கவும்  அதை வழங்காத பட்சத்தில் பேருந்தை ஜப்தி செய்ய மாவட்ட நீதிபதி ஹேமானந்த குமார் உத்தரவிட்டார்.  அதன்படி விருதுநகர்- திருச்செந்தூர் சென்ற அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜபதி செய்து விருது நகர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

தியாகி லீலாவதி நினைவு தினம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.24- மதுரை வில்லாபுரம் வீராங்கனை தியாகி லீலாவதி நினைவு தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டது.  திருச்சி வெண்மணி இல்லத்தில் ஞாயிறன்று நடை பெற்ற நிகழ்விற்கு கட்சியிக் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் கே.பாலபாரதி தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் தோழர் லீலாவதி படத்திற்கு மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர்.

நூறுநாள் வேலை பணித்தளப் பொறுப்பாளர்
பேருந்திலிருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம்

ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

மதுரை, ஏப். 24-  மதுரையில் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ஊராட்சி எழுத்தர்  முத்து இரு ளாண்டி தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. மதுரை மாவட்டம் மையிட்டான் பட்டியை சேர்ந்த நாகலட்சுமி. இவர் மையிட்டான்பட்டி கிராமத்தில் நூறு நாள் வேலை பணித்தள பொறுப்பாளராக பணியாற்றினார். கலெக்டர் உத்தரவுப்படி நேரடியாக நாகலட்சுமி பணியில் சேர்ந்த தால் மையிட்டான்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலமுருகன், உறுப்பி னர் வீரக்குமார், கிளார்க் முத்து ஆகியோர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அவர் புகாரளிக்க மதுரை  சென்றபோது ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்தார். இவர்  எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனது  தற்கொலைக்கு மூன்று பேர் தான் காரணம் எனக் கூறியிருந்தார். இதன்படி மூன்று பேர்  மீது கள்ளிக்குடி காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்தனர். நாகலெட்சுமியின் கணவர் கணேசன் மற்றும் அவரது ஐந்து பெண்குழந்தைகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை  மாவட்டக்குழு அலுவலகத்தில் அடைக்க லம் புகுந்தனர். அவர்களை கட்சித் தலை வர்கள் மூன்று நாட்கள் பாதுகாத்தனர். பின்னர் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பெ.மூர்த்தி, ஆட்சியர் அனீஷ்சேகர் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் நாகலெட்சுமியின் உடலைப் பெற்றுக்கொண்டனர். நாக லெட்சுமியின் ஐந்து பெண் குழந்தை களுக்கும் தலா ரூ. ஒரு லட்சம் நிவாரண மாக வழங்குவதாக அமைச்சர் உறுதி யளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த வழக்கில் ஏற்கனவே ஊராட்சி துணைத் தலைவர் பாலமுருகன்(46), உறுப்பினர் வீரக்குமார்(33) ஆகியோர் முன்ஜாமீன் கோரிய மனு தள்ளபடி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் இந்த வழக்கில் ஊராட்சி மன்ற எழுத்தர் முத்து இருளாண்டி தனக்கு  முன்ஜாமின் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு திங்களன்று நீதிபதி இளந்திரையன் முன் திங்களன்று  விசார ணைக்கு வந்தது விசாரணை செய்த நீதி பதி, முத்து இருளாண்டியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.