ரூ. 18.42 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள கீழடி தொல்பொருள் அகழ்வைப்பக கட்டிடத்தை தமிழக முதல்வர் மார்ச் 5அன்று திறந்து வைக்கிறார். இதனை முன்னிட்டு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் வியாழனன்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகர் மன்றத் தலைவர் மாரியப்பன்கென்னடி,மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தொல்லியல்துறை ஆணையர் சிவானந்தம், இணை இயக்குநர் ரமேஷ் மற்றும் பலர் உள்ளனர்.