மதுரை, நவ.12- மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. சனிக்கிழமை காலை பத்து மணி முதல் விடாமல் லேசான மழை பெய்தது. சனிக்கிழமை காலை ஒன்பது மணி நிலவரப்படி மதுரை மாவட்டத்தில் பெய்த மழை விவரம்: (மில்லி மீட்டரில்) சிட்டம்பட்டி-16.20, கள்ளந்திரி-19.20, தனி யாமங்கலம்-18, மேலூர்-23, சாத்தையார் அணை-27, வாடிப்பட்டி-45 திரு மங்கலம்-54.60, உசிலம் பட்டி-22, மதுரை வடக்கு-53, தல்லாகுளம் - 46.20, விரகனூர்-33.40, விமான நிலையம் (மதுரை)-57.20, இடையபட்டி-25, புலிப்பட்டி-18.60, சோழவந்தான்-24, மேட்டுப்பட்டி-23.80, குப்பணம்பட்டி-17.40, கள்ளிகுடி-10.60, பேரையூர்-45.20, ஆண்டிபட்டி-37.20, ஏழுமலை-25.20, பெரியபட்டி-16.20 நீர் மட்டம்:பெரியார்-136.85 அடி,வைகை-69.55 அடி மதுரையில் வெள்ளியன்று நள்ளிரவு பெய்த கன மழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. கடந்த சில நாட்களுக்கு முன் மூன்றுமாவடி அருகில் உள்ள கொடிக்குளம் கண்மாயிலிருந்து வண்டியூர் கண்மாய்க்கு வரும் நீர்வழிப் பாதையில் உடைப்பு ஏற்பட்டதால் மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட டி எம் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியது. மழை தொடர்வதால் டி. எம். நகர் மற்றும் உத்தங்குடி பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியது. அமைச்சர் பி. மூர்த்தி, மேயர் வ. இந்திராணி, மாவட்ட ஆட்சியர் எஸ். அனிஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் காலோன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.