மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் சித்திரை திருவிழாவிற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மேயர் வ.இந்திராணி, துணை மேயர் தி.நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர்.கா.ப.கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில் துணை ஆணையாளர்கள் இணை ஆணையர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.