சின்னாளப்பட்டி ஏப்.22- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப் பட்டி பிரிவிலிருந்து பேருந்து நிலையம் செல்லும் பூஞ்சோலை பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில் சாலையோரத்தில் மழைநீர் வடிகால் மற்றும் சாக்கடை கால்வாயுடன் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரு கின்றன. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் சாலையோர பகுதி என்பதால் கடும் போக்குவரத்து இடையூறும் ஏற் பட்டு வருகிறது. மேலும் ஆங்காங்க பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ள தால் பொதுமக்கள் தங்களது வீட்டிற்கு செல்ல மூன்று தெருக்களை சுற்றி வரும் நிலைமை உள்ளது. இதுகுறித்து திமுக கவுன்சிலர் சாந்தி கூறுகையில், கழிவுநீர் கால்வாயு டன் சாலை விரிவாக்க பணிகள் துவங்கி யபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் முக்கிய சாலை சந்திப்புகளில் திட்டமிட்டு பணிகளை செய்யாமல் கடந்த மூன்று மாதங்களாக சாலை யோரத்தில் ஆங்காங்கே பெரிய பள் ளங்களை தோண்டி பணிகளை கிடப்பில் போட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக குழந்தைகள், பெண்கள் முதியவர் என பலரும் கால்வாய்க்குள் விழுந்து, பல விபத்துக்கள் ஏற்பட்டுள் ளது. இது சம்பந்தமாக நெடுஞ்சாலைத் துறையிடம் கேட்டால் அலட்சியமாக பதில் சொல்லுகிறார்கள்.எனவே இந்த சாலையோர சாக்கடை பணி களை விரைந்து முடிக்க வேண்டும் இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தார்.