திண்டுக்கல், டிச.30- டேக்வாண்டோ அகில இந்திய போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்ற திண்டுக்கல் மாணவி மோனஸ்ரீ ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ளார். இதனையொட்டி மாணவி மோன ஸ்ரீ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணனிடம் வாழ்த்துப் பெற்றார். திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள ஜீவா நகரைச் சேர்ந்தவர் மாணவி எம்.மோனஸ்ரீ. இவர் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு இளங்கலை விவசாயம் எடுத்து படித்து வருகிறார். சமீபத்தில் இந்திய பள்ளி மற்றும் கல்வித்துறையின் சார்பில் கேரளா மாநிலம் கொச்சினில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பெண்கள் பிரிவு டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திண்டுக்கல் மாவட்ட மாநாட்டில் பங்கேற்க வந்த கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோரை மாணவி மோனஸ்ரீ சந்தித்து வாழ்த்துப் பெற்றார். கட்சியின் மாவட்டக் குழு அலு வலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநிலக்குழு உறுப்பி னர் என்.பாண்டி, மாவட்டச் செயலா ளர் ஆர்.சச்சிதானந்தம், பயிற்சி யாளர் மாஸ்டர் ஜோதிபாசு, வாலிபர் சங்க மாநில இணைச்செயலாளர் சி.பாலச்சந்திரபோஸ் ஆகியோர் பங்கேற்றனர். மாணவி மோனஸ்ரீ திண்டுக்கல் லில் உள்ள தோழர் எஸ்.ஏ.டி. டேக் வாண்டோ கிளப்பில் பயிற்சி பெற்ற மாணவி ஆவார். (நநி)