districts

அருப்புக்கோட்டை: கல்லூரி மாணவி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டதாக வாக்குமூலம்

அருப்புக்கோட்டை, மார்ச் 31- கமுதி அருகே கடற்கரைக் குச் சென்ற காதலர்களை மிரட்டி காதலனை கட்டிப் போட்டு விட்டு, காதலியை 3 பேர் கொண்ட கும் பல் பாலியல் வல்லுறவு செய் துள்ளது. இதுகுறித்து பாதிக் கப்பட்ட கல்லூரி மாணவி நீதி பதியிடம் வாக்குமூலம் அளித் துள்ளார். அருப்புக்கோட்டை பகுதி யைச் சேர்ந்தவர் ஹரிகிருண் ணன் (24). இவரும் அதே பகுதி யைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியும் கடந்த 23-ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மூக்கையூர் கடற் கரைக்கு சென்றனர். அங்கு இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் ஹரிகிருஷ்ணனை கட்டிப் போட்டு விட்டு மாணவியை பாலி யல் வல்லுறவு செய்ததாக கூறப் படுகிறது. பின்பு அந்த நபர்கள் இருவரிடமும் இருந்த செல் போன்கள் மற்றும் நகைகளை பறித்துச் சென்று விட்டனர். தனது கண்முன் தன்னுடைய காதலியை மர்ம நபர்கள் பாலி யல் பலாத்காரம் செய்ததால் மன வேதனை அடைந்த ஹரி கிருஷ்ணன் வி‌ஷம் குடித்தார்.  இதையடுத்து அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். வி‌ஷம் குடித்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்தபோதே, கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சம்பவம் தெரிய வந்தது. மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி யவர்களை கண்டுபிடித்து கைது செய்ய இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்த ரவிட்டார்.

இதையடுத்து மாண வியை பாலியல் வல்லுறவு  செய்த 3 பேரை காவல்துறை யினர் கண்டுபிடித்தனர். சாயல்குடி அருகே உள்ள  வேப்பங்குளத்தைச் சேர்ந்த பத்மாஸ்வரன் (24), விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நத்தகுளம் தினேஷ்குமார் (24), அஜித் குமார் (23) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்தனர். அவர்களில் பத்மாஸ்வரன், தினேஷ்குமார் ஆகிய 2 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரான அஜித்குமார் திருப்பூரில் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் காதலன் ஹரிகிருஷ்ணன் வி‌ஷம் குடித்த தகவலை அறிந்த கல்லூரி மாண வியும் வி‌ஷம் குடித்தார். அவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் கல்லூரி மாணவியிடம், அருப்புக் கோட்டை முதலாவது குற்ற வியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மணிமேகலை வாக்குமூலம் பெற்றார். இதில் தனக்கு நேர்ந்த கொடுமையை அம்மாணவி வாக்குமூலம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

;