சென்னை,பிப்.13- தமிழ்நாடு சட்டப்பேர வையில் ஆலங்குடி சட்டப் பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினர் எஸ். ராஜ சேகரன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது. இதுகுறித்து இரங்கல் குறிப்பு வாசித்த பேரவைத் தலைவர் அப்பாவு, தோழர் எஸ். ராஜசேகரன் இரண்டு முறை புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும், 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஆலங்குடி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பின ராகவும் மக்களால் தேர்வு செய்யப்பட்டு மிகச் சிறந்த மக்கள் பிரதிநிதியாக பணியாற்றியவர் என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், முன்னாள் தமிழ்நாடு ஆளு நர் பாத்திமா பீவி, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ்.வெங்கிடர மணன், சங்கரன் நேத்ராலயா மருத்துவமனையின் இயக்குநர் புகழ் பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ். பத்ரிநாத், தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநர் எம்.எம். ராஜேந்திரன் ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. முன்னாள் உறுப்பி னர்கள் ஆர்.வடிவேல், ஏ.தெய்வநாயகம், தங்கவேல், துரை. இராம சாமி, கு.க.செல்வம், எஸ்.எஸ். இராசசேகரன் ஆகி யோர் மறைவுக்குவும் இரங் கல் குறிப்பை பேரவைத் தலைவர் வாசித்தார். இதையடுத்து உறுப்பி னர்கள் அனைவரும் எழுந்து நின்று மறைந்த தலை வர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.