மதுரை, ஜன.20- நாடு முழுவதும் உள்ள நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறு வனங்களான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூ ரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் மற்றும் நியூ இந்தியா அஸ்ஸுரன்ஸ் ஆகிய நிறுவனங்களைச் சார்ந்த ஊழியர்கள் ஜனவரி 19 புதனன்று ஒரு மணி நேர வெளி நடப்பு போராட்டத்தினை வெற்றிகரமாக செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 2017 ஆம் வருடம் முதல், நான்கரை வருடங்களுக்கு மேல் நிலுவையுள்ள ஊதிய உயர் வினை வழங்கிடாத ஒன்றிய அரசி னையும் பொது இன்சூரன்ஸ் நிர்வா கத்தையும் கண்டித்து இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அகில இந் திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தி னால் நாடு முழுவதும் அறைகூவல் விடுக்கப்பட்டது.
பல்வேறு துறைகளில் முதலீடாக ரூ.2 லட்சம் கோடி
கடந்த ஐந்து வருடங்களில் பொது இன்சூரன்ஸ் துறையில் இந்த நான்கு நிறுவனங்களும் திரட்டிய பிரி மியத்தின் தொகை, 36 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 72 ஆயிரம் கோடி ரூபாயாக இரட்டிப்பாக உயர்ந்துள் ளது. இழப்பீடு வழங்குவதிலும் இந்த நிறுவனங்கள் உலகளவில் மிகச் சிறந்த சேவையினை கொடுத்து வரு கின்றனர். இந்த காலகட்டத்தில் அர சுக்கு டிவிடெண்டுகளாக 3 ஆயிரம் கோடி ரூபாய்களை இந்த நான்கு நிறு வனங்கள் கொடுத்துள்ளன. பல்வேறு துறைகளில் முதலீடாக இதுவரை 2 லட்சம் கோடி ரூபாய் செய்துள்ளன. இந்த சாதனைகள் அனைத்தும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை வைத்துக் கொண்டு நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
800 ஊழியர்கள் கொரோனாவிற்கு பலி
கடந்த இரண்டு வருடங்களாக, கொரோனா நோய் தொற்று காலத்தி லும், முன் களப்பணியாளர்கள் என்கிற முறையில், இந்திய நாட்டு மக்களின் இன்சூரன்ஸ் தேவையை, குறிப்பாக மெடிக்கிளைம் இன்சூரன்ஸ் தேவை களைப் பூர்த்தி செய்யும் விதமாக, மிகச் சிறப்பான சேவையினை பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் பங்களித் துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா நோய் தொற்று காலத்தில் 800- க்கும் மேற்பட்ட ஊழி யர்கள், நாடு முழுவதும் கொரோனா விற்கு பலியாகியும், பல்லாயிரக்க ணக்கான ஊழியர்கள் கொரோனா வால் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட பாலிசிதாரர் சேவையில் சிறப்பான பங்களிப்பை நல்கியுள்ளனர். இப்படிப்பட்ட பணியினை செய்து வரும் ஊழியர்களும் 54 மாதங்களாக வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர் வினை மறுத்து வரும் ஒன்றிய அர சினையும் ஜி.ஐ.சி. நிர்வாகத்தையும் கண்டித்து தான் இந்த வெளிநடப்பு போராட்டம் நாடு முழுவதும் நடை பெற்றது. மதுரையில், யுனிடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலகம் முன்பாக இந்த வேலை நிறுத்தத்தின் போது பெருந்திரளான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காப்பீட்டு கழக ஊழி யர் சங்கத்தின் துணைத் தலைவர் சுரேஷ் குமார் ஆதரித்துப் பேசுகை யில், பொது இன்சூரன்ஸ் ஊழியர் களுக்கு நிலுவையிலுள்ள ஊதிய உயர்வினை உடனடியாக வழங்கிட வும், பொது இன்சூரன்ஸ் நிறுவனங் களின் தனியார்மய முயற்சியை கை விடவும் வலியுறுத்தினார். வேலைநிறுத்தப் போராட்டத்தின் நோக்கங்களை வலியுறுத்தி கருத்து ரையாற்றிய மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் புஷ்பராஜன்,ஒன்றிய அரசு பொது இன்சூரன்ஸ் ஊழியர்களின் நலன்களில் சிறிதும் அக்கறையற்ற போக்கினை கைவிட வேண்டும் என் றும் பொது இன்சூரன்ஸ் ஊழியர் களுக்கு தர வேண்டிய நியாயமான ஊதிய உயர்வினை உடனடியாக தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கத்தின் பொறுப்பாள ரான ராமகிருஷ்ணன் பேசுகையில், ஒன்றிய அரசு மக்களின் நலன்களுக்கு எதிரான அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தனியார்மய முயற்சி தேசவிரோத செயல் என்று சாடினார். பொது இன்சூரன்ஸ் சேவை யில் சிறந்து பணியாற்றிய ஊழி யர்களின் ஊதிய உயர்வு இன்னும் காலம் தாழ்த்தக் கூடாது என்று அர சையும் நிர்வாகத்தையும் கண்டித் தார்.