விருதுநகர், மே 5- விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இணையர்கள் பி.கனகா-பிச்சை ஆகியோரின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மண்டல அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியு)வில் முக்கிய தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் தோழர் பிச்சை. அவ ரது மனைவி பி.கனகா. அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் மாவட்ட துணைத் தலை வராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு இருவரும் ஒரு சில நாட்கள் இடைவெளியில் உயிரிழந்தனர். இந்நிலையில், இருவரது படத் திறப்பு விழா சத்திர ரெட்டியபட்டியில் உள்ள அவர் களது இல்லத்தில் நடைபெற் றது. நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி. வேலுச்சாமி, மாதர் சங்க மாநில செயலாளர் எஸ்.லட்சுமி ஆகி யோர் தலைமை தாங்கினர். சிஐ டியு மாநிலத் தலைவர் அ.சவுந்த ரராசன், மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் புகழுரை ஆற்றினார். இதில், சிபிஎம் மாவட்டச் செய லாளர் கே.அர்ஜூனன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்துக்குமார், எல்.முருகன், வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்துவேலு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கார்மேகம், ஜோதிலட்சுமி, எம்.சுப்புராம், எம். ஜெயபாரத் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.