districts

img

தோழர் வி.பி.சிந்தன் நினைவுநாள் அஞ்சலி

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மே 7 அன்று தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனைக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ்  தலைமை வகித்தார்.  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் 981 பயனாளிகளுக்கு ரூ.4,17,54,259 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, மண்டபம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் , திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் புல்லாணி , மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.