திண்டுக்கல், ஜுன் 10- திண்டுக்கல் ரெண்டலப் பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றி யக்குழு உறுப்பினர் எஸ். ஜோசப் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் ரெண்டலப் பாறையைச் சேர்ந்த கட்சி யின் ஒன்றியக்குழு உறுப்பி னர் மே 1 ஆம் தேதி விபத்தில் படுகாயமுற்று மரணமடைந் தார். அவரது உருவப்படத் திறப்பு நிகழச்சி வெள்ளி யன்று மாலை அவரது சொந்த ஊரான ரெண்டலப்பாறை யில் உள்ள இந்திரா காலனி யில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றி யக்குழு உறுப்பினர் தங்க மணி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பி னர்கள் மதுக்கூர் இராமலிங் கம், கே.பாலபாரதி, மாநி லக்குழு உறுப்பினர் என். பாண்டி, மாவட்டச்செயலா ளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் பி.வசந்தா மணி, ஜி.ராணி, கே.பிரபா கரன், எம்.ராமசாமி, ஒன்றி யச்செயலாளர் சரத்குமார், நகரச்செயலாளர் அரபுமுக மது மற்றும் தோழர் ஜோசப் குடும்பத்தினர் தனமேரி, ஜோன்சன் ஊர் முக்கியஸ் தர்கள் சாமுவேல், அந்தோ ணிசாமி, ஆரோக்கியசாமி, ஜான்கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இலவச மருத்துவ முகாம் தோழர் ஜோசப் படத் திறப்பு நிகழ்ச்சியை முன் னிட்டு தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதி கள் சங்கம், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பாக இல வச மருத்துவ முகாம் நடை பெற்றது. கண்தானம் செய்த தோழர் ஜோசப் தோழர் ஜோசப்பின் கண்களை குடும்பத்தினர் தானம் செய்திருந்தனர். அதனை பாராட்டி மருத்துவ முகாம் நிகழ்ச்சியில் அவரது மனைவி தனமேரியையும் அவரது குடும்பத்தினரும் கௌரவிக்கப்பட்டனர்.