மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில துணைத்தலைவரும் மேடைக் கலைவாணர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட தோழர் என். நன்மாறன் அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி அக்டோபர் 28 வெள்ளியன்று மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இதில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.