மதுரை, மார்ச் 1- கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் கே.பி.ஜானகியம்மாள் அவர் களின் 30 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மாவட் டக்குழு அலுவலகத்தில் மார்ச் 1 செவ்வாய்க்கிழமையன்று நடை பெற்றது. கே. பி. ஜானகியம்மாள் உருவப்படத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .இதில் மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணே சன், புறநகர் மாவட்டச் செயலா ளர் கே. ராஜேந்திரன், மாநி லக்குழு உறுப்பினர் எஸ். பாலா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜா. நரசிம்மன், அ. ரமேஷ், ம. பாலசுப்பிரமணியம், டி. செல்வா .மாமன்ற உறுப்பி னர்கள் நா.விஜயா, டி. குமர வேல், டி. நாகராஜன், மாவட் டக்குழு உறுப்பினர்கள் பி. ராதா, எஸ். சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேற்கு ஒன்றாம் பகுதிக்குழு சார்பில் மேட்டு தெரு, நாகு நகர் கிளை சார்பில் பாட்ரீஸ் லூமூம்பா படிப்பகம், பாலு படிப்பகம், நாகு நகர் மாதர் கட்சி கிளை, எச்எம்எஸ் காலனி ஜானகி நகர் கிளை, கோச்சடை ஜானகி யம்மாள் படிப்பகம் ஆகிய பகுதி களில் அஞ்சலி நிகழ்ச்சி நடை பெற்றது .இதில் பகுதிக்குழு செயலாளர் கு. கணேசன், பகுதிக்குழு உறுப்பினர்கள் பி. வீரமணி, ஜி. சுதாராணி தங்க வேல், கருத்தகண்ணன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.