இந்திய தொழிற்சங்க மையத்தின் 15 ஆவது மாநாடு நவம்பர் 4 5 6 தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது.இந்த மாநாட்டில் ஏற்றுவதற்காக நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்திலிருந்து தோழர் ஏ.நல்ல சிவன் நினைவு ஜோதி நவம்பர் 2ஆம் தேதி காலையில் புறப்பட்டது. தோழர் ஏ.நல்லசிவன் நினைவு ஜோதியை சிஐடியு மூத்த தலைவர் எஸ். ரவீந்திரன் எடுத்து கொடுக்க ஜோதிப் பயணக்குழு தலைவரும் சிஐடியு மாநில செயலாளர் ஆர்.மோகன் பெற்றுக்கொண்டார். துவக்க நிகழ்ச்சிக்கு சிஐடியு விகே. புரம் நகர ஒருங்கிணைப்பாளர் வி.இசக்கிராஜன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் ஆர்.ரசல், சிஐடியு மாவட்டத் தலைவர் பீர்முகமதுஷா, மாவட்டச் செயலாளர் ஆர்.முருகன், நிர்வாகிகள் என்.சுரேஷ், எஸ். மாரிச்செல்வம், முருகன் மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் பெருமாள், மின் ஊழியர் மத்திய அமைப்பு தலைவர் சங்கர், பொது தொழிலாளர் சங்க செயலாளர் முருகன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். விக்கிரமசிங்கபுரத்திலிருந்து புறப்பட்டு அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர் ,முக்கூடல், ஆலங்குளம், நெல்லை டவுன், மேலப்பாளையம், பாளையங்கோட்டை, சங்கர்நகர் ஆகிய பகுதிகளுக்கு புதன்கிழமை சென்றடைந்து வியாழக்கிழமை காலை கோவில்பட்டியில் துவங்கி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சென்று நவம்பர் 4 ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கும் சிஐடியு மாநில மாநாட்டில் ஏற்றப்படுகிறது