districts

img

காந்திகிராம பல்கலை.யில் கணினி தொழில்நுட்ப மாநாடு

சின்னாளபட்டி, மார்ச் 19- திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகக் கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டுத் துறை சார்பில், புதுமையான தீர்வுகளுக்  கான மேம்பட்ட கணினி தொழில்நுட்பங்கள்   பற்றிய சர்வதேச மாநாடு நடைபெற்றது.பேராசிரியர் சண்முகவடிவு வரவேற்றார்.  முனைவர் எம்.ஜி. சேதுராமன்,  கலச லிங்கம் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் டாக்டர் சசி ஆனந்த் ஸ்ரீதரன், முனை வர் பி.இளங்கோ, முனைவர் மன்சூர் ரூமி, முனைவர்  சீதாலட்சுமி  ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.  இரண்டு நாள் மாநாட்டில், 77 உள்நாட்டு  மற்றும் வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் தங்  கள் ஆய்வுப் பணிகளை சமர்ப்பித்தனர். வழங்கியவர்களின் விரிவாக்கப்பட்ட சுருக்கங்கள் வெளியிடப்பட்டன. முனைவர் மாரியப்பன் நிறைவுரையாற்றினார்.