சின்னாளப்பட்டி,ஜூன் 30- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சின்னாளப்பட்டி பேரூராட்சி யில் ஜெயமுருகன் என்பவர் கடந்த 37 வருடங்களாக துப்புரவுப்பணியா ளராக வேலை செய்தார். இவர் சிஐடியு சங்கத்தில் உள்ளார். ஜூன் 30 அன்று ஜெயமுருகன் பணி நிறைவு பெற்றார். இதையொட்டி பேரூ ராட்சி வளாகத்தில் அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலை வர் பிரதீபா கனகராஜ் முன்னிலை வகித்தார்.சிஐ டியு ஒன்றிய கன்வீனர் வி.கே.முருகன் பாராட்டிப் பேசினார். இந்நிகழ்ச்சியில் தலைமை எழுத்தர் கலியமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் கணேசன், துப்புரவு மேற்பார்வை யாளர்கள் தங்கதுரை, சரளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.