districts

img

அரசு பள்ளிகளை பாதுகாக்க இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் உறுதியேற்பு

திண்டுக்கல், ஏப்.7-  பள்ளிக்கல்வி பாது காப்பு இயக்கத்தின் மாவட்ட அமைப்புக்குழுக் கூட்டம் திண்டுக்கல்லில் வெள்ளிக் கிழமையன்று நடை பெற்றது.இதில் அரசு பள்ளி களை பாதுகாக்க தன்னார்வ லர்கள் உறுதிமொழியேற்ற னர். இக்கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரான்சிஸ் பிரிட்டோ , வளர் மதி ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலச்செயலாளர் ஜே. கிருஷ்ணமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ச.மோசஸ், பேச்சியம்மாள், ஆகியோர் கலந்து கொண்ட னர். அரசு பள்ளியை பாது காப்பது என்றும், அரசு பள்ளி யில் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்தவும், தன் னார்வலர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளி யில் சேர்ப்பதாக உறுதி மொழி எடுத்துக்கொண்டார் கள். மாவட்ட ஒருங்கிணைப் பாளர்களாக பிரான்சிஸ் பிரிட்டோ, வளர்மதி, ஜெயக் குமார், குருபிரசாத் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர். ஒவ்வொரு வட்டாரத்தி ற்கும் 3 ஒருங்கிணைப்பா ளர்கள் தேர்வு செய்யப்பட்ட னர். அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க கூட்டத்தை நடத்தி அரசு பள்ளியில் இருக்கக் கூடிய குறைகளை நிவர்த்தி செய்வதும், மாணவர்களை சேர்க்க வரக்கூடிய கல்வி யாண்டில் முயற்சி எடுப்பது என்றும் முடிவு செய்யப் பட்டது. வரும் கல்வி ஆண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை வாசிப்பை நேசிக்கும் வகையில் ஒரு கதை ஒரு புத்தகம் என்ற அடிப்படையில் அரசு தயாரித்த புத்தகங்களை பள்ளி அளவில் கொண்டு செல்லவும் அதனை மாண வர்கள் படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவும் பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்தது.  இதில் மாவட்ட முழுவ துமிருந்து 150க்கும் மேற் பட்ட இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண் டார்கள்.