தேனி, டிச.29- தேனி - போடிநாயக்க னூர் புதிய அகல ரயில் பாதையில் டிசம்பர் 29 வியா ழனன்று ரயில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற் கொண்டார். மதுரை - போடிநாயக்க னூர் 90 கிமீ தூர அகல ரயில் பாதை திட்டம் ரூ.592 கோடி செலவில் நிறைவேறியுள் ளது. தேனி - போடிநாயக்க னூர் இடையே 15 கிமீ அகல ரயில் பாதை பணிகள் சமீ பத்தில் நிறைவடைந்தது. இந்த புதிய ரயில் பாதை பிரி வில் 8 பெரிய பாலங்கள் மற்றும் 184 சிறிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த புதிய ரயில் பாதையில் வியா ழக்கிழமையன்று பெங்க ளூரு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் தேனி ரயில் நிலை யத்திலிருந்து மோட்டார் டிராலி மூலம் காலை 10.30 மணிக்கு ஆய்வை துவக்கி னார். முன்னதாக தேனி ரயில் நிலையத்தில் தேனி- போடி இடையே ரயில் இயக்கு வதற்கு அமைக்கப்பட்டுள்ள பிளாக் இன்ஸ்ட்ருமென்ட், கணிப்பொறித் திரை ஆகிய வற்றை ஆய்வு செய்தார். பின்பு தேனி அருகே உள்ள வாழையாறு ஆற்றுப்பாலம், கோட்டகுடி மற்றும் கோட்ட குடி கிளை ஆற்று பாலங் கள், பூதிப்புரம், வாழை யாத்துப்பட்டி சாலை கீழ் பாலங்கள், ரயில் பாதை வளைவுகள், மின்தட குறுக் கீடுகள், நீர்வழி கீழ் பாலங் கள், போடிநாயக்கனூர் - புதூர் ரயில்வே கேட் ஆகிய வற்றையும் ஆய்வு செய்தார். தெற்கு ரயில்வே கட்டு மான பிரிவு தலைமை செயல் அதிகாரி வி. கே. குப்தா, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், முதன்மை பொறி யாளர் மஸ்தான் ராவ், முதன்மை கட்டுமான பொறி யாளர் இளம் பூரணன் உள் ளிட்டோர் கலந்து கொண்ட னர். அதிவேக சோதனை ஓட்ட ஆய்வு ரயில் போடி நாயக்கனூரில் இருந்து மூன்று ரயில் பெட்டிகளுடன் மாலை 03.27 மணிக்கு புறப் பட்டு மாலை 03.36 மணிக்கு 9 நிமிடங்களில் தேனி வந்து சேர்ந்தது.