திண்டுக்கல், ஜன.13 திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், திண்டுக்கல் தோல்பத னிடும் தொழிலாளர் சங்கத்தின் முன்னோடித் தலைவருமான தோழர் எஸ்.ஏ.தங்கராஜனின் 20வது ஆண்டு நினைவு தினம் ஜனவரி 13 வெள்ளியன்று அனுஷ் டிக்கப்பட்டது. கட்சியின் தலைவர் கள், சிஐடியு தலைவர்கள் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாவட்டக்குழு அலுவலகம் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மூத்த தோழர் ஆர்.மணி, மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் டி.முத்துச்சாமி.ஜி.ராணி, மாமன்ற உறுப்பினர் கே.எஸ்.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எஸ்.ஏ.டி.குடும்பத்தினர் எஸ்.ஏ.டி.நினைவிடம் உள்ள பாறைப்பட்டி கல்லறை தோட்டத் தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது மனைவி சகுந்தலா, மகள் வனிதா, மகன் வாஞ்சிநாதன், மருமகன் வ.கல்யா ணசுந்தரம், மருமகள், பேரன் பேத்திகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
சிஐடியு அஞ்சலி
சிஐடியு சார்பாக நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்டச்செயலாளர் கே.பிரபாக ரன் தோல்பதனிடும் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சி.பி.ஜெயசீலன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிபிஎம் சார்பாக தோமையார்புரத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சிஐடியு சார்பாக மாவட்டக்குழு அலுவலகத்தில் தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் எஸ்.ஏ.டி. மனைவி சகுந்தலாம்மாள், மகன் வாஞ்சி நாதன், மகள் வனிதா, மருமகள் அனிஸ்கவிதா மற்றும் சிஐடியு சார்பாக மாவட்டத்தலைவர் கே. ஆர்.கணேசன், சிபிஎம் நகரச் செயலாளர் ஏ.அரபுமுகமது, மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதே போல் வத்தல குண்டு சாலையில் உள்ள சிஐடியு அலுவலகம் மற்றும் தோமை யார்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் எஸ்.ஏ.டி. குடும்பத்தினர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி கள் வழங்கினர்.
டேக்வாண்டோ மாணவர்களுக்கு பரிசு
திண்டுக்கல் மாவட்ட டேக் வாண்டோ கழகம் மற்றும் எஸ்.ஏ.டி. டேக்வாண்டோ கிளப் சார்பாக மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றன. நொச்சி யோடைப்பட்டி கார்மெல் மெட்ரி குலேசன் பள்ளி மாணவ, மாணவி யர்கள் முதலிடத்தையும், திண்டுக் கல் புனித வளனார் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர்கள் இரண்டாம் இடத்தையும், ஒட்டன்சத்திரம் கிறிஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர்கள் 3வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர். பரிசுகளை எஸ்.ஏ.டி. டேக் வாண்டோ கிளப் தலைவர் வாஞ்சி நாதன், ஒருங்கிணைப்பாளர் அனிஸ்கவிதா, மாவட்ட டேக்வாண் டோ சங்க தலைவர் சார்வாகன் பிரபு, மாவட்டச்செயலாளர் மாஸ்டர் ஜோதிபாசு, மாவட்ட டேக்வாண்டோ சங்க சேர்மேன் என்.கமலஹாசன், துணைத் தலைவர் காஜாமைதீன், புரவலர் சர்மிளா தினேஷ், துணைச்செயலா ளர் நித்யா ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். (நநி)