districts

img

சிபிஎம் ஸ்தாபகத் தலைவர் தோழர் ஜோதிபாசு நினைவுதினம்

மதுரை, ஜன. 17-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒரு வரும் மேற்குவங்க மக்களின் அன்  புக்குரிய முதலமைச்சருமான தோழர் ஜோதிபாசு அவர்களின்  13 ஆம் ஆண்டு நினைவுதினம் ஜன வரி 17 அன்று கடைப்பிடிக்கப் பட்டது. கட்சியின் மதுரை மாநகர் வடக்கு - 2 ஆம் பகுதிக்குழு சார்பில் மீனாம்பாள்புரம் சக்கரை செட்டி யார் படிப்பகம் முன்பு நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு பகு திக்குழு செயலாளர் ஏ. பாலு தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் என். ஜெயசந்திரன், தீக்கதிர் நாளிதழ் மதுரை பதிப்பு பொதுமேலாளர் ஜோ. ராஜ்மோகன் மற்றும் பலர்  கலந்துகொண்டு தோழர் ஜோதி பாசு உருவப்படத்திற்கு மலர்தூவி புகழஞ்சலி செலுத்தினர்.   “எங்கள் எய்ம்ஸ் எங்கே ?” கையில் செங்கல்லை ஏந்தி பிரச்சாரம் இந்த நிகழ்ச்சியில் “எங்கள் எய்ம்ஸ் எங்கே ?” என்ற முழக்  கத்துடன் பிரச்சாரம் துவக்கி வைக்  கப்பட்டது. ஒன்றிய பாஜக அரசு,  மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான கட்டுமானப் பணி களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை துவக்கிட வேண்டும். மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். தேசிய மருந்துசார் கல்வி மற்றும்  ஆராய்ச்சி நிறுவனத்தை (நெய்பர்) மதுரையில் துவக்கிட நடவடிக்கை  எடுத்திட வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி  24 அன்று மதச்சார்பற்ற கட்சிகளின் நாடாளு மன்ற உறுப்பினர்களும். தொழில்  வர்த்தகர் சங்கம், மடீட்சியா, உணவு பொருள் வியாபாரிகள் சங்  கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பெருந்திரள் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறுகிறது. இதனை பிரச்சாரம் செய்யும் வகை யில் “எங்கள் எய்ம்ஸ் எங்கே?  - என்ற  முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கட்சி யினர் செங்கலை கையில் ஏந்தி -  படம் எடுத்து - சமூக வலைதளங்க ளில் பகிர்ந்தனர்.  மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்டச் செய லாளர் மா.கணேசன் உள்ளிட்ட பலர் கையில் செங்கல் ஏந்தி பிரச்சா ரத்தை துவக்கி வைத்தனர்.