districts

img

இ.கே.நாயனாரின் வண்ணமயமான நினைவுகள் நாயனார் அருங்காட்சியகத்தில் அணிவகுக்க மனைவி சாரதா டீச்சர் ஒப்படைத்தார்

கண்ணூர், மார்ச் 27- கேரளம் நெஞ்சோடு அணைத்துக் கொண்ட மக்கள் தலைவர் இ.கே.நாயனா ரின் நினைவுகள், இனி நாயனார் அகாட மியில் உள்ள அருங்காட்சியகத்தில் இருக்  கும். கையூர் போராட்ட தளபதியும், மூன்று முறை கேரள முதல்வராக இருந்த, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர், மாநிலச் செயலாள ருமாக செயல்பட்டவர் இ.கே.நாயனார்.  அவரது மனைவி சாரதா டீச்சர், நாய னார் பயன்படுத்திய அவருக்கு விருப்பமான பொருட்களை அகாடமி அருங்காட்சிய கத்திற்கு வழங்கினார். நாயனார் விரும்பி அணியும் ஜிப்பா மற்றும் (மேல் சட்டை) ஓவர்கோட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் எம்.வி.ஜெயராஜ னிடம் வழங்கப்பட்டது. எப்போதும் நாயனார் தன்னுடன் வைத்துக் கொள்ளும் பாக்கெட் ரேடியோ,  சூட்கேஸ், பை, கடைசியாக அணிந்த ஆடை கள், பேனா, கண்ணாடி, பெல்ட், வாட்ச், காலணிகள் மற்றும் சாய்வு நாற்காலியை கொடுத்தார். நாயனார் பாதுகாத்து வைத்தி ருந்த விமான, ரயில் பயண சீட்டுகளையும் அருங்காட்சியகத்தில் இனி பார்க்கலாம்.  ‘‘நாயனார் இன்று ராஜினாமா செய்வார்; கட்சி குடியிருப்புக்கு செல்கி றார்’’ என்கிற 2001 மே 13, தேதியிட்ட தேசாபி மானி செய்தி உட்பட ஏராளமான பல முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், தோழருடன் கிளிஃப் ஹவுஸில் (முதல்வரின் முகாம் இல்லம்) எடுக்கப்பட்ட குழு புகைப்படம் உட்பட ஏராளமான அரிய சேகரிப்புகள் இதில் உள்ளன.  இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் டி.வி.ராஜேஷ், மாவட்ட பஞ்சாயத்து தலை வர் பி.பி.திவ்யா, அகாடமி அருங்காட்சியக  ஆய்வாளர் வினோத் டேனியல், திட்ட மேலா ளர் வினோத் மேனன், நிகழ்ச்சி மேலாளர் சுரேஷ் நாயர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.