districts

img

இந்தித் திணிப்புக்கு கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

தூத்துக்குடி, அக். 18 இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு திட்டங்களைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் செவ்வாயன்று கல்வி வளாகங்களில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என இந்திய மாணவர் சங்கம் அறிவித்திருந்தது. இதையொட்டி தூத்துக்குடி வஉசி கல்லூரியில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் கார்த்திக் தலைமையில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கிஷோர்குமார்,மாதவன், கல்லூரி நிர்வாகிகளான வேல்சூர்யா, பிரகாஷ், ஆதி,சுகேந்திரன்,வெனிஸ்டன்,தினேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.