பழனி, ஏப்.28- பழனி அடுத்துள்ள இரவிமங்கலம் பெருங்கற்காலச் சின்னங்களை பழனி யாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி வர லாற்றுத் துறை தலைவர் பேராசிரியை முனைவர் ச. ஜெயந்திமாலா தலைமை யில் பேராசிரியைகள் முனைவர் மோ .தங்கம், முனைவர் பெ.வளர்மதி, த.குமுத வள்ளி மற்றும் மாணவிகள் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். சுமார் 3000 ஆண்டுகள் பழமையான இந்தப் பெருங்கற்கால புதைகுழி சின்னங் கள் நிறைந்த பகுதியில் மாணவிகள் கருப்பு சிவப்பு பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகளின் உடைந்த பாகங்கள், கீறல்கள் நிறைந்த பானை ஓடுகள், நகக்குறி ஓடுகள், பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய உணவுப்பாத்திரங்கள், மண்குடுவைகளின் கால்கள் ஆகியவற்றை கண்டறிந்து சேக ரித்தனர். அத்துடன் புதிதாக பண்டைய இரும்பு உருக்காலை ஒன்றையும் கண்டறிந்து அங்கு இரும்பை உருக்கப் பயன்படுத்திய சுடுமண் அச்சுகள், இரும்புத்தாதுக்கள் ஆகி யவற்றையும் கண்டறிந்து சேகரித்தனர்.சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் 3000 ஆண்டு கள் பழமையான இந்த இரவிமங்கலப் பெருங்கற்காலச் சின்னங்களை தொல்லி யல் துறை அகழாய்வு செய்து மண்ணுக்கு அடியில் உள்ள பண்டைய பண்பாட்டு வர லாற்றை உலகறியச் செய்ய உதவ வேண்டு மென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த னர். இந்த ஆய்வை தொல்லியல் ஆய்வா ளர் நாராயணமூர்த்தி நெறிப்படுத்தினார்.