திண்டுக்கல், மார்ச் 27- திண்டுக்கல் நர்சிங் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பலாத் காரத்தில் ஈடுபட்ட தாளாளர் ஜோதிமுருகன் மீண்டும் தலை மறைவாகிவிட்டார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் முறை யிட்டதன் பின்னணியில் நீதிபதி கள் உத்தரவையடுத்து கொடுத்த கெடு முடிந்த நிலையில் தலை மறைவான ஜோதிமுருகனை காவல் துறையினர் தேடிவருகிறார்கள். திண்டுக்கல் மாவட்ட அமமுக மாநில எம்.ஜி.ஆர். இளைஞர ணித்தலைவரும். ஒரு சமூகத்தின் கௌரவத் தலைவருமாவார் ஜோதிமுருகன். சுரபி நர்சிங் கல் லூரி, கபி பாலிடெக்னிக், ராம பிரபா கல்லூரி என பல கல்வி நிறு வனங்களை நடத்தி வருகிறார். சுரபி நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு இவர் பாலியல் தொல்லை தருவதாக புகார் எழுந்தது. இரவு நேரங்களில் 20க்கும் மேற்பட்ட மாணவிகளை தனது வாகனத்தில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் எழுந்த தையடுத்து பழனி சாலையில் சுரபி கல்லூரி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங் கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கங்கங்களின் தலை வர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முத்தனம்பட்டி கிராம மக்களும் இந்த மறியலில் பங்கேற்றனர். கோட்டாட்சி யர், டி.ஐ.ஜி, மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர், கூடு தல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலர் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் தமிழக முதல் வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இருப்பினும் மாணவிகள் புகார் குறித்து காவல்துறையினர் ஜோதிமுருகனை கைது செய்ய தாமதப்படுத்தியதால் தலை மறைவானார். அவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. ஒரு வார மாக தலைமறைவான ஜோதி முருகன் நீதிமன்றத்தில் சரண டைந்தார். அவர் மீது காவல்துறை யில் புகார் கொடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் கொடுத்தனர்.
இந்த நிலையில் போக்சோ குற்றவாளியான ஜோதிமுருகனுக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் ஜாமீன் வழங் கியது. இதனைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக திண்டுக் கல் நீதிமன்றம் முன்பாக சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் கே. பாலபாரதி தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. பால பாரதி, ராணி உள்ளிட்ட மாதர் சங்கத்தலைவர்கள் மீது காவல் துறை அதிகாரிகள் பொய் வழக் குப்பதிவு செய்து மிரட்டினர். இதை எதிர்த்து மாதர் சங்கம் சார்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுத்தது. திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் போக்சோ குற்றவாளி ஜோதி முருகனுக்கு ஜாமீன் வழங்கி யதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மாநில செய லாளர் சுகந்தி நீதிமன்றத்தில் முறையிட்டார். ஜோதிமுருகன் தனது கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பல்வேறு ஆதாரங்க ளையும் வழங்கினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜோதிமுரு கனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து மூன்று நாட்களுக்குள் நீதி மன்றத்தில் சரணடைய வேண் டும் என்று உத்தரவிட்டனர். 3 நாட்கள் கெடு முடிந்த பின்னரும் ஜோதிமுருகன் எந்த நீதிமன்றத் திலும் சரணடையவில்லை. ஜோதிமுருகன் மீண்டும் தலை மறைவாகிவிட்டார். காவல்துறை யினர் அவரைத் தேடி வருகின்ற னர்.