இராமநாதபுரம்,பிப்.4- இராமநாதபுரம் மாவட்டத்தில் 5வது ‘முகவை சங்கமம்’ புத்தகத் திருவிழா இராமநாதபுரம் இராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பிப்ரவரி 9 முதல் 19 ஆம் தேதி வரை நடை பெறுகிறது. புத்தகத் திருவிழாவிற்கான மரபு நடைபயண துவக்கவிழா நிகழ்ச்சி பிப்ரவரி 4 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) வி.எஸ்.நாராயண சர்மா முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ம.காமாட்சி கணேசன் தலைமை யேற்று மரபு நடை பயணத்திற்கான பேருந் தினை கொடியசைத்து துவக்கிவைத்தார்.